follow the truth

follow the truth

October, 25, 2024
HomeTOP1ஐந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

ஐந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

Published on

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் ஐந்து மாவட்டங்களில் பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இரத்தினபுரி, களுத்துறை, காலி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள பல பிரதேச செயலகங்களுக்கு 24 மணித்தியாலங்களுக்கு இந்த எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மாத்தறை மாவட்டத்தின் பிடபெத்த பிரதேச செயலகப் பிரிவுக்கு இரண்டாம் நிலை மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பும், அக்குரஸ்ஸ, அதுரலிய, பஸ்கொட, முலட்டியான, கொட்டபொல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு முதல் நிலை மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பும் வழங்கப்பட்டுள்ளன.

காலி மாவட்டத்தின் நாகொட, நெலுவ, பத்தேகம, யக்கலமுல்ல, எல்பிட்டிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் வலஸ்முல்ல பிரதேச செயலகப் பிரிவுக்கும் முதல் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், களுத்துறை மாவட்டத்தின் வலல்லாவிட்ட, பாலிந்தநுவர மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தின் கிரியெல்ல மற்றும் எஹெலியகொட ஆகிய பிரிவுகளுக்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கஜேந்திரகுமாருக்கு பிணை

யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் தேர்தல் பிரசார நடவடிக்கையின் கைது செய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பொலிஸ்...

கட்டுநாயக்க அதிவேக வீதியில் கடும் வாகன நெரிசல்

பேலியகொடவில் இருந்து கட்டுநாயக்க வரை செல்லும் நெடுஞ்சாலையில் கடும் வாகன நெரிசல்நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த வீதியின் பராமரிப்பு பணிகள் காரணமாக...

மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது

நாட்டு மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். புத்தளத்தில் இன்று (24) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து...