follow the truth

follow the truth

October, 25, 2024
HomeTOP1'ஸ்ரீலங்கன்' விற்பனை தாமதமாகும் சாத்தியம்

‘ஸ்ரீலங்கன்’ விற்பனை தாமதமாகும் சாத்தியம்

Published on

அரச நிறுவனங்களிலேயே அதிக நட்டத்தைச் செலுத்தும் இலங்கை விமான நிறுவனத்தின் (srilankan airline) அபிவிருத்திக்காக முதலீட்டாளர் (மறுசீரமைப்பு) வழங்குவதில் மேலும் தாமதம் ஏற்படுவதற்கான அறிகுறிகள் தென்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

விமான நிறுவனத்தின் மறுசீரமைப்புக்கான ஆலோசனைகளை வழங்க சர்வதேச ஆலோசனை நிறுவனமான லஸார்ட் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் அவர்களின் ஆலோசனை அறிக்கை இன்னும் பெறப்படவில்லை என்றும் துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவிக்கின்றது.

இது தொடர்பில் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவிடம் வினவிய போது, ​​லஸார்ட் அறிக்கை இதுவரை கிடைக்கப்பெறவில்லை என தெரிவித்தார்.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ், ஸ்ரீலங்கன் கேட்டரிங் மற்றும் தரைவழிச் செயற்பாடுகள் ஒரு முதலீட்டாளருக்கு ஒன்றாக வழங்கப்படுமா அல்லது தனித்தனியாக வழங்கப்படுமா என்பது குறித்து இதுவரை தெளிவான முடிவு எட்டப்படவில்லை எனவும், கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாகவும் அமைச்சர் கூறினார்.

லஸார்ட் ஆலோசனை அறிக்கை கிடைத்த பின்னர் அது குறித்து அமைச்சரவைக்கு தெரியப்படுத்தி தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ரஷ்யாவில் இருந்து விமானங்கள் வருவதால், மத்தள விமான நிலையம் ஓரளவு வளர்ச்சி கண்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கஜேந்திரகுமாருக்கு பிணை

யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் தேர்தல் பிரசார நடவடிக்கையின் கைது செய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பொலிஸ்...

கட்டுநாயக்க அதிவேக வீதியில் கடும் வாகன நெரிசல்

பேலியகொடவில் இருந்து கட்டுநாயக்க வரை செல்லும் நெடுஞ்சாலையில் கடும் வாகன நெரிசல்நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த வீதியின் பராமரிப்பு பணிகள் காரணமாக...

மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது

நாட்டு மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். புத்தளத்தில் இன்று (24) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து...