follow the truth

follow the truth

October, 24, 2024
Homeஉள்நாடுநாட்டில் தொடர்ந்தும் மழையுடன் கூடிய காலநிலை

நாட்டில் தொடர்ந்தும் மழையுடன் கூடிய காலநிலை

Published on

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேற்கு மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும். நாடு முழுவதும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 தொடக்கம் 45 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், மத்திய வங்காள விரிகுடா கடற்பகுதியில் நிலைகொண்டுள்ள ‘மோகா’ சந்தா சூறாவளி, தென்கிழக்கு வங்கதேசம் மற்றும் வடக்கு மியான்மர் கடற்கரையை நாளை பிற்பகல் கடக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

எவ்வாறாயினும், மீனவ மற்றும் கப்பல் போக்குவரத்து சமூகத்தினர் 5 முதல் 20 வடக்கு அட்சரேகைகள் மற்றும் 82 மற்றும் 100 கிழக்கு தீர்க்கரேகைகளுக்கு இடைப்பட்ட கடற்பகுதிகளில் மீள் அறிவித்தல் வரை பயணிக்க வேண்டாம் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது

நாட்டு மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். புத்தளத்தில் இன்று (24) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து...

ஒரு முட்டை 41 ரூபாவுக்கு விற்பனை செய்ய நடவடிக்கை

ஒரு முட்டையை 41 ரூபாவுக்கும் குறைவான சில்லறை விலையில் விற்பனை செய்யும் வகையில் முட்டைகளைச் சந்தைக்கு விநியோகிப்பதற்கு முட்டை...

பொதுத்தேர்தல் – வாக்களிப்பில் விரலில் அடையாளமிடுவது தொடர்பான அறிவித்தல்

பொதுத்தேர்தலின் போது வாக்காளரின் இடது கை ஆட்காட்டி விரல் மீது உரிய அடையாளமிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. வாக்காளருக்கு...