follow the truth

follow the truth

August, 28, 2024
Homeஉள்நாடுபயறு விலை குறையுமா?  பயறு கொள்வனவிற்கு நிதி ஒதுக்கியதாக கூறும் அரசாங்கம்!

பயறு விலை குறையுமா?  பயறு கொள்வனவிற்கு நிதி ஒதுக்கியதாக கூறும் அரசாங்கம்!

Published on

உள்நாட்டு பயறு உற்பத்தியை கொள்வனவு செய்ய திறைசேரி நிதி ஒதுக்கியுள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

ஊடு பயிராக வளர்க்கப்படும் பயறு அறுவடையை விற்பனை செய்ய முடியாத நிலை இருப்பதாக விவசாயிகள் செய்த முறைப்பாட்டை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், சந்தையில் தற்போது பயறு ஒரு கிலோ 890 ரூபா வரை விற்கப்படுகிறது. மொணராகலை, ஹம்பாந்தோட்ட, ரஜரட்ட பிரதேசங்களில் பயறு அறுவடை தற்போது நடந்து வருகிறது.

எனினும், தமது உற்பத்திப் பொருட்களை விற்க முடியாதிருப்பதாக விவசாயிகள் முறையிட்டுள்ளதாக மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். சந்தையில் தற்போது நிலவும் விலைக்கேற்ப விவசாயிகளிடம் பயறு கொள்வனவுசெய்யப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

ஒருபுறம் சந்தையில் ஒரு கிலோ பயறு 890 ரூபாவிற்கு விற்கப்படுகிறது. சந்தையில் பொருட்களுக்கு கேள்வி அதிகரிக்கும் நிலையில் அதன் விலையும் அதிகரிக்கிறது.

இலங்கையில் பயறு விலை கடந்த ஒரு வருடத்தில் 100 வீதம் அதிகரித்திருப்பதாக சந்தை நிலவரங்கள் கூறுகின்றன.

இந்த நிலையில், விவசாயிகள் தமது உற்பத்திகளை விற்க முடியாதிருப்பதாக முறையிட்டுள்ளதாக அமைச்சர் கூறுகிறார்.

அனைத்துப் பொருட்களின் விலைகளையும் அதிகரித்துள்ள நிலையில், விவசாயிகளுக்கு தமது உற்பத்திக்கேற்ற விலை கிடைக்க வேண்டும் என்பது இன்றியமையாததாகும்.

உற்பத்தி அதிகரித்திருப்பதால் 890 ரூபாவிற்கு விற்கப்படும் பயறு விலை குறையுமா என்பது மட்டுமே தற்போது பொதுமக்களின் கேள்வியாக இருக்கிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஷிரான் பாஷிக்கின் மகன் கைது

பிரபல போதைப்பொருள் வியாபாரி ஷிரான் பாஷிக்கின் மகன் நதீன் பாஷிக் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இவர்...

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு 02 துப்பாக்கிகள் வழங்க தீர்மானம்

பணத்திற்கு இரண்டு துப்பாக்கிகளை பெற்றுக்கொள்ளும் உரிமையை பாராளுமன்ற அமைச்சர்களுக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல...

தலைமைப் பொறுப்பை ஏற்று ஒரு மாதத்தில் நிரோஷன் பதவி இராஜினாமா

கடந்த மாதம் ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பிரேமரத்ன, தனது...