follow the truth

follow the truth

September, 21, 2024
Homeஉள்நாடுஅரசியலில் களமிறங்கும் மைத்திரி மகன்!

அரசியலில் களமிறங்கும் மைத்திரி மகன்!

Published on

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொலன்னறுவை இளைஞர் கூட்டணியின் புதிய தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகன் தஹாம் சிறிசேன ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

பொலன்னறுவை தொகுதியின் இளைஞர் படையணியை ஸ்தாபிக்கும் நிகழ்வு முன்னாள் ஜனாதிபதியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது.

இதன்போது இளைஞர் கூட்டணியின் புதிய தலைவர் பதவிக்கு தஹாம் சிறிசேன பரிந்துரைக்கப்பட்டார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாப்பின்படி, மாவட்ட ரீதியில் நிறுவப்படும் ஒரு அமைப்பின் பதவிக்கு தஹாம் சிறிசேன தேர்ந்தெடுக்கப்படுவது இதுவே முதன்முறையாகும்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, 1969ஆம் ஆண்டு பொலன்னறுவை இளைஞர் பேரவையின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் இதன்பின்னர், நீண்ட அரசியல் பயணத்தை மேற்கொண்ட மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதியாக பதவியேற்று, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராகவும் தற்போது பதவி வகித்து வருகிறார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

திங்களன்று விசேட அரச விடுமுறை

செப்டம்பர் 23ம் திகதி அரசு விசேட விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின்...

பாதுகாப்பு குறித்து பொலிசாரின் விசேட அறிவிப்பு

எதிர்வரும் காலங்களில் நாட்டில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா...

ஜனாதிபதி தேர்தல் – தபால்மூல வாக்குகளை எண்ணும் பணி ஆரம்பம்

2024 ஜனாதிபதி தேர்தலுக்கான தற்போது மாவட்ட ரீதியாக தபால்மூல வாக்குகளை எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தெரிவித்தாட்சி அலுவலர்கள்...