follow the truth

follow the truth

October, 24, 2024
HomeTOP1ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதி

ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதி

Published on

உலகின் முதலாவது சர்வதேச சுற்றாடல் பல்கலைக்கழகத்தை இலங்கையில் நிறுவுவதன் மூலம் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள உலக நாடுகளுக்கு ஆதரவளிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

காலநிலை மாற்றம் இன்று உலகிற்கு சவாலாக உள்ள போதிலும் அது தொடர்பில் ஆய்வுகளை மேற்கொள்வதற்கான நிலையம் இல்லை எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

பல நாடுகளை பங்குபற்ற வைத்து அதற்கான பணிகளை முன்னெடுக்க இலங்கை தயாராக இருப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று பிற்பகல் நடைபெற்ற 10வது சுற்றுச்சூழல் விமானி ஜனாதிபதி பதக்கம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் சனத்தொகை சுதந்திரம் பெற்ற போது இருந்ததை விட தற்போது மூன்று மடங்கு அதிகமாக வாழ்கின்ற போதிலும் நாட்டில் காணிகளின் அளவு அதிகரிக்கவில்லை காடுகளின் அளவு குறைவடைந்துள்ளதாக ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டியுள்ளார்.

2050 ஆம் ஆண்டளவில் உலக மக்கள் தொகை அதிகரிக்கும் போது காலநிலை மாற்றத்தை எவ்வாறு எதிர்கொள்வது என்பது சவாலாக இருக்கும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது தொடர்பான புதிய சட்டத் தொடர்களை கொண்டு வருவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அறுகம்பே சம்பவத்தில் மூவர் கைது – விஜித ஹேரத்

அறுகம்பே பகுதியில் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இதுவரை மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு...

பங்களாதேஷ் மாணவர்கள் மீண்டும் போராட்டம்

பங்களாதேஷ் மாணவர்கள் போராட்டம் மீண்டும் தொடங்கியுள்ளது. ஜனாதிபதி பதவி விலகக் கோரிய இந்த போராட்டத்தின் போது ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிடவும்...

“அமெரிக்க தூதுவராலயம் சொல்லித்தான் அரசுக்கே தெரியும் போல..”

அறுகம்பே பகுதியை மையப்படுத்தி தாக்குதல் என அரச புலனாய்வுத்துறைக்கு தகவல் கிடைத்ததாகவும் அதற்காக கடந்த 7ம் திகதி முதல்...