follow the truth

follow the truth

September, 20, 2024
Homeபொலிட்டிக்கல் மேனியாமெனிங் வணிக வளாகத்தில் கடை வழங்குவதாக கூறி முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரூ.650 மில்லியன் மோசடி

மெனிங் வணிக வளாகத்தில் கடை வழங்குவதாக கூறி முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரூ.650 மில்லியன் மோசடி

Published on

பேலியகொட மெனிங் வணிக வளாகத்தில் கடை அறைகளை வழங்குவதற்காக முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஒருவர் பல்வேறு நபர்களிடம் இருந்து 650 மில்லியன் ரூபாவை பெற்றுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

10 கடை அறைகள் தருவதாக கூறி தொழிலதிபர் ஒருவரிடம் மட்டும் குறித்த இராஜாங்க அமைச்சர் பெருமளவு பணம் பெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஆனால், உரிய பணம் வழங்கப்பட்ட பலருக்கு அந்த வணிக வளாகத்தில் கடைகள் வழங்கப்படவில்லை. பேலியகொட மெனிங் வணிக வளாகம் நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமானது.

இதன்படி, பலர் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் தெனுக விதானகமகேவை சந்தித்து இது தொடர்பான தமது முறைப்பாடுகளை முன்வைத்துள்ளனர்.

அவர்கள் வழங்கிய தகவலின் பிரகாரம், சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இராஜாங்க அமைச்சர் தெனுக விதானகமகே முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நோயிலிருந்து மீண்டு வரும் நிலையில் மருத்துவர்களை மாற்றப் போகிறீர்களா?

இந்த நாட்டு மக்களிடம் எந்த பொய்யை வேண்டுமானாலும் கூறி அவர்களின் மனதைவெல்ல முடியும் என ஜே.வி.பி நினைக்கிறதாக அமைச்சர்...

10 வருடங்களில் மீட்க முடியாது என்று சொல்லப்பட்ட நாட்டை இரண்டே ஆண்டுகளில் மீட்டெடுத்தார்

எனது 40 வருட அரசியலில் நான் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு வாக்களிக்கவில்லை, வாக்களிப்பேன் என்ற நம்பிக்கையும் எனக்கு இருக்கவில்லை...

06 மாதங்களில் போதைப் பொருள் விநியோகத்தை நிறுத்துவோம்

புலனாய்வுத் துறை அறிக்கையின் பிரகாரம் 20 இலட்சம் மேலதிக வாக்குகளால் ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி பெறும். காலை...