follow the truth

follow the truth

October, 24, 2024
HomeTOP1ஆவணங்களுக்கு அங்கீகாரமளிக்கும் சேவைகள் மறு அறிவித்தல் வரை மட்டு

ஆவணங்களுக்கு அங்கீகாரமளிக்கும் சேவைகள் மறு அறிவித்தல் வரை மட்டு

Published on

வெளிவிவகார அமைச்சின் தூதுரக சேவைப் பிரிவின் கணினிக் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக, ஆவணங்களுக்கு அங்கீகாரமளிக்கும் சேவைகள் மறு அறிவித்தல்வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

வெளிவிவகார அமைச்சு அறிக்கை ஒன்றின் மூலம் இதனை அறிவித்துள்ளது.

இதன்படி, கொழும்பில் உள்ள வெளிவிவகார அமைச்சின் தூதரக அலுவல்கள் பிரிவு மற்றும் யாழ்ப்பாணம், திருகோணமலை, மாத்தறை, கண்டி, குருநாகல் ஆகிய பிராந்திய அலுவலகங்களின் ஆவணங்களின் சரிபார்ப்பு மற்றும் சான்றளிப்புப் பிரிவுகளின் சேவைகள் மறு அறிவித்தல் வரும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

தற்போது, தூதரகப் பிரிவு மிகவும் அவசரமான ஆவணங்களுக்கு மாத்திரம் முன்னுரிமை வழங்கும் நிலையில், கணினிக் கட்டமைப்பு சீராக்கப்பட்டவுடன், ஏனைய ஆவணங்களுக்கான பணிகள் செயற்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், ஏனைய தூதரக சேவைகள் எந்தவித தடங்கலும் இன்றி தொடர்கின்றன.

இந்த நிலையில், பயனாளர்கள் தங்களுக்கான சேவைகள் குறித்து அறிந்துகொள்ள தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

கொழும்பு 01 இல் உள்ள தூதரக விவகாரப் பிரிவு, – 0112 338 812

பிராந்திய அலுவலகம், யாழ்ப்பாணம் 0212 215 972

பிராந்திய அலுவலகம், திருகோணமலை 0262 223 182 அல்லது இறுதி இரு இலக்கங்களுக்கு பதிலாக 86 இனை பயன்படுத்த முடியும்.

பிராந்திய அலுவலகம், கண்டி 0812 384 410

பிராந்திய அலுவலகம், குருநாகல் 0372 225 931

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சம்பளத்தினை உயர்த்துங்கள் : ரணில் விக்கிரமசிங்க

அரச உத்தியோகத்தர்களின் சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பில் தாம் எடுத்த சட்ட அமைச்சரவை தீர்மானத்தை உடனடியாக அமுல்படுத்த வேண்டும் என...

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சிறைச்சாலையின் எச் வார்டில் தடுத்துவைப்பு

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தற்போது மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நேற்று...

மஹிந்த ராஜபக்ஷவுக்கு 4-5 ஓய்வூதியங்கள்

நாட்டின் அபிவிருத்தியை புதிய பாதைக்கு கொண்டு செல்வதற்கு புதிய சட்டங்களை உருவாக்குவதற்கு பெரும்பான்மை பலத்துடன் கூடிய பலமான பாராளுமன்றம்...