follow the truth

follow the truth

October, 24, 2024
Homeவிளையாட்டுஅமைச்சர் நியமித்த இடைக்காலக் குழுவை ஏற்க முடியாது - மக்ஸ்வெல் டி சில்வா

அமைச்சர் நியமித்த இடைக்காலக் குழுவை ஏற்க முடியாது – மக்ஸ்வெல் டி சில்வா

Published on

நிர்வாகத்திற்கு சட்டபூர்வமாக நியமிக்கப்பட்ட றிஸ்வி இல்யாஸ் தலைமையிலான உத்தியோகபூர்வ சபையை மாத்திரமே இலங்கை தேசிய ஒலிம்பிக் குழு ஏற்றுக்கொள்ளும் என தேசிய ஒலிம்பிக் குழுவின் பொதுச் செயலாளர் மக்ஸ்வெல் டி சில்வா சர்வதேச ரக்பி ஒன்றியத்திற்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.

இலங்கை ரக்பியின், மற்றும் வேறு எந்த வகையிலும் நியமிக்கப்பட்ட குழுக்களை ஏற்றுக்கொள்ளாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

விளையாட்டு அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ள இடைக்கால குழுக்களை சர்வதேச ஒலிம்பிக் குழுவும், ஆசிய ஒலிம்பிக் குழுவும் ஏற்றுக்கொள்ளாது எனவும் இலங்கை ரக்பி யூனியனின் விவகாரங்கள் அதன் அரசியலமைப்புக்கேற்ப நிர்வகிக்கப்பட வேண்டும் எனவும் தேசிய ஒலிம்பிக் குழுவின் செயலாளர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய ஒலிம்பிக் குழு மற்றும் விளையாட்டுச் சட்டத்தின் பிரகாரம் சம்பந்தப்பட்ட சங்கங்களின் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் எனவும் மக்ஸ்வெல் டி சில்வா கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி மற்றும் ஆசிய ஒலிம்பிக் கமிட்டி உட்பட ஏழு தரப்பினருக்கு மக்ஸ்வெல் டி சில்வா அந்தக் கடிதத்தின் பிரதிகளை அனுப்பியுள்ளார்.

றிஸ்வி இல்யாஸ் தலைமையிலான ரக்பி நிர்வாகத்தை விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க கடந்த ஏப்ரல் 11ஆம் திகதி கலைத்துவிட்டு ரக்பி நிர்வாகத்துக்கான இடைக்கால குழுவொன்றை நியமித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

T20 போட்டியில் அதிக ஓட்டங்கள் – சிம்பாப்வே சாதனை

காம்பியாவிற்கு எதிரான இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் 4 விக்கெட் இழப்பிற்கு 344 ஓட்டங்களை குவித்த சிம்பாப்வே அணி...

மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டி இன்று

மகளிர் இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டி இன்று நடைபெறவுள்ளது இது நியூசிலாந்து மகளிர் அணிக்கும்...

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி இன்று

மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 03 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று...