follow the truth

follow the truth

September, 8, 2024
Homeவிளையாட்டுகிண்ணத்தை தன்வசப்படுத்தியது சென்னை சுப்பர் கிங்ஸ்

கிண்ணத்தை தன்வசப்படுத்தியது சென்னை சுப்பர் கிங்ஸ்

Published on

14 ஆவது ஐபிஎல் தொடாின் இறுதிப்போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை 27 ஓட்டங்களால் வென்ற சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 4 ஆவது தடவையாகவும் ஐபில் கிண்ணத்தை தனதாக்கியது.

துபாயில் இன்று இடம்பெற்ற 2021 ஐபிஎல் மாபெரும் இறுதிப்போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதின.

அதற்கமைய, நாணய சுழற்சியில் வென்ற கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி, முதல் களத்தடுப்பை தேர்வுசெய்ய, சென்னை சுப்பர் கிங்ஸ் முதலில் துடுப்பெடுத்தாடியது.

இந்நிலையில், சென்னை அணி 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 192 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 165 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.

அதன்படி 27 ஓட்டங்களால் இறுதிப் போட்டியில் வெற்றிபெற்ற சென்னை சுப்பர் கிங்ஸ் அணி சம்பியனானது.

இதுவரையில், ஐபில் தொடர்களில் 9 முறை இறுதிப்போட்டிக்கு தெரிவாகியுள்ள சென்னை அணி இம்முறையுடன் சேர்த்து மொத்தமாக 4 தடவைகள் ஐபிஎல் கிண்ணத்தை வென்றுள்ளது.

இதேவேளை மூன்று முறை ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்ற கொல்கத்தா அணி இரண்டு தடவைகள் சம்பியனாகியுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

2027 ஆசியக் கிண்ண கால்பந்து போட்டி – தகுதிச் சுற்று 10ஆம் திகதி

எதிர்வரும் 10ஆம் திகதி சவூதி அரேபியாவில் நடைபெறவுள்ள 2027ஆம் ஆண்டுக்கான ஆசிய கால்பந்தாட்டக் கிண்ணத் தகுதிச் சுற்றுப் போட்டியின்...

நியூசிலாந்து அணியின் சுழல் பந்து பயிற்சியாளராக ரங்கன ஹேரத்

நியூசிலாந்து அணியின் சுழல் பந்து பயிற்சியாளராக இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச...

கிரிக்கெட் தடை செய்யப்பட்ட இத்தாலிய நகரம்

இத்தாலியின் மோன்கோல்ஃபோன் அதிகாரிகள் அந்நகரில் கிரிக்கெட் விளையாட தடை விதித்துள்ளனர். அந்த நகரத்தில் வசிப்பவர்களில் 30% பேர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள். அவர்களில்...