கொழும்பு முகத்துவாரம் பகுதியில் நடமாடும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களை தாக்கிய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
தாக்குதலில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
கொழும்பு – முகத்துவாரம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் இரண்டு கான்ஸ்டபிள்கள் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் முகத்துவாரம் எலிஹவுஸ் பகுதியில் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட போதே தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.
குறித்த சந்தேகபர் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விழைவித்தமை , பொலிஸ் உத்தியோகத்தர்களை தாக்கியமை, படுகாயமடையச் செய்தமை, கைது செய்த போது தப்பிச் செல்ல முயற்சித்தமை உள்ளிட்ட குற்றங்களைப் புரிந்துள்ளார். எனவே இவருக்கு எதிராக கடுமையாக சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.