குரங்குகளை சீனாவுக்கு அனுப்பும் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
சீனாவின் ஆய்வகங்களில் சித்திரவதைக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக அவர் தெரிவித்திருந்தார்.
முன்னாள் வனஜீவராசிகள் அமைச்சர் என்ற வகையில் தாம் இந்தச் செயலுக்கு முற்றாக எதிரானதாகவும், இது அருவருக்கத்தக்க செயல் எனவும் அமைச்சர் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
மிருகக்காட்சிசாலைகளுக்கிடையிலான பரிமாற்ற நிகழ்ச்சிகளைத் தவிர, பெரிய அளவில் விலங்குகளை ஏற்றுமதி செய்யக்கூடாது என்றும், இலங்கையில் விதிகள் கூட இல்லை என்றும் நவீன் திஸாநாயக்க வலியுறுத்துகிறார்.
விலங்குகள் தங்கள் இயற்கையான வாழ்விடங்களில் சுற்றித் திரிவதற்கு முழு உரிமை உண்டு எனவும் தெரிவித்திருந்தார்.