சில அரை சொகுசு பஸ்களை நெடுஞ்சாலைகளில் இயக்குமாறு இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
அரை சொகுசு பஸ்களை சாதாரண சேவைகளாக அல்லது சொகுசு பஸ் சேவைகளாக மாற்றுவதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு எடுத்துள்ள தீர்மானத்திற்கு மே 31 ஆம் திகதி வரை அவகாசம் வழங்கும் போதே இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன மேற்கண்டவாறு தெரிவித்தார்.