follow the truth

follow the truth

September, 21, 2024
Homeஉள்நாடுதிருக்குமரன் நடேசன் இன்று கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலை

திருக்குமரன் நடேசன் இன்று கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலை

Published on

பெண்டோரா ஆவணம் தொடர்பான விசாரணைகளுக்காக முன்னாள் பிரதியமைச்சர் நிரூபமா ராஜபக்ஷவின் கணவர் திருக்குமரன் நடேசன் இரண்டாவது நாளாகவும் இன்று (15) கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.

உலக பெரும்புள்ளிகளுக்கு உரித்தான, வெளிநாடுகளிலுள்ள மறைமுக சொத்துகள் குறித்த தகவல் பெண்டோரா பேப்பர்ஸ் என்ற பெயரில் வெளியான ஆவணம் ஊடாக கசிந்திருந்தது.

இந்த ஆவணத்தில் முன்னாள் பிரதியமைச்சர் நிரூபமா ராஜபக்ஷ மற்றும் அவரது கணவரான திருக்குமரன் நடேசன் ஆகியோரது பெயர்களும் அடங்கியிருந்தது.

இந்நிலையில், குறித்த ஆவணத்தில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து ஒரு மாதத்துக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதியினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கமைய, கையூட்டல் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்தது.

அதற்கமைய, கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அழைப்பின் பேரில் பெண்டோரா விவகாரம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக முதல் தடவையாக கடந்த 8 ஆம் திகதி அவ்வாணைக்குழுவின் முன்னிலையான திருக்குமரன் நடேசனிடம் 4 மணித்தியால வாக்குமூலம் பெறப்பட்டிருந்தது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

(UPDATE) பல மாவட்டங்களில் பதிவான வாக்களிப்பு வீதம்

இன்று (21) காலை 10 மணி வரை பல மாவட்டங்களில் வாக்களிப்பு வீதம் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. களுத்துறை - 32% நுவரெலியா...

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ வாக்களித்தார்

2024 ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச இராஜகிரிய கொடுவேகொட விவேகராம...

பல சேவைகளை அத்தியாவசிய சேவைகள் செய்யும் வர்த்தமானி அறிவிப்பு

பல சேவைகளை அத்தியாவசிய சேவையாக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார். இதன்படி, மின்சார விநியோகம் தொடர்பான...