14 ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் மகுடம் சூடப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் பிரமாண்ட இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.
துபாயில் நடைபெறும் இந்த ஆட்டம் இலங்கை நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. லீக் சுற்றில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இருமுறையும் வீழ்த்தியுள்ளது.
டோனி தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் 9 ஆவது ஐபிஎல் இறுதிப்போட்டி இது. சென்னை அணி 3 முறையும் கொல்கத்தா அணி 2 முறையும் கோப்பைகளை வென்றுள்ளன.