follow the truth

follow the truth

September, 21, 2024
Homeஉள்நாடுகொவிட் தொற்றுக்குள்ளான மாணவர்களுக்கு பகடிவதை : 70 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் இடைநீக்கம்

கொவிட் தொற்றுக்குள்ளான மாணவர்களுக்கு பகடிவதை : 70 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் இடைநீக்கம்

Published on

பேராதனை பல்கலைக்கழகத்தின் கால்நடை மருத்துவம் மற்றும் விலங்கு அறிவியல் பீடத்துடன் இணைந்த 70 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் அடங்கிய ஒரு குழு, கொவிட் வைரஸால் பாதிக்கப்பட்ட சக மாணவர்களை பகடிவதை செய்ததற்காக இடைநீக்கம் செய்யப்பட்டதாக பல்கலைக்கழகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது

சிரேஷ்ட மாணவர்களினால் இந்த பகடிவதை நிகழ்ந்துள்ளது. இதனால் பல்கலைக்கழகத்திற்குள் வைரஸ் பரவியதும் என்றும் அவர்
குறிப்பிட்டுள்ளார்.

சிரேஷ்ட மாணவர்கள் கொவிட் அறிகுறிகளுடன் புதிதாக வந்த மாணவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்குச் செல்ல வேண்டாம்
என்றும் வளாகத்தில் இருக்க வேண்டாம் என்றும் எச்சரித்ததாகக் கூறப்படுகிறது. இதன் விளைவாக வைரஸ் முழு தொகுதி மற்றும்
பல்கலைக்கழக ஊழியர்களிடையே பரவியது,’ என்று அவர் கூறினார். இந்த சம்பவத்தில் ஈடுபடாத மாணவர்கள் உட்பட முழு தொகுதி மாணவர்களும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

2024 ஜனாதிபதித் தேர்தல் – வாக்களர்களுக்கான அறிவித்தல்

ஜனாதிபதித் தேர்தலின் போது வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணும் நிலையங்களில் சட்டவிரோத செயற்பாடுகள் தவிர்க்கப்பட வேண்டும் என தேர்தல்கள்...

வாக்களிப்பு நிலையங்களுக்கு விசேட பாதுகாப்பு

நாடளாவிய ரீதியாக ஸ்தாபிக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையங்களுக்கு அண்மித்த பகுதிகளில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தேர்தல் பாதுகாப்பு கடமைகளுக்காக...

இலங்கையில் இன்று ஜனாதிபதி தேர்தல்

இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று(21) நடைபெறுகிறது. இம்முறை ஜனாதிபதி தேர்தலில் 39...