follow the truth

follow the truth

October, 20, 2024
Homeஉள்நாடுமின் கட்டணத்தை 30% இனால் குறைக்க PUCSL கோரிக்கை

மின் கட்டணத்தை 30% இனால் குறைக்க PUCSL கோரிக்கை

Published on

டொலரின் பெறுமதி வீழ்ச்சி, எரிபொருள் விலை வீழ்ச்சி உள்ளிட்ட பல காரணங்களால் மின்சார உற்பத்திச் செலவு குறைந்துள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான கடிதம் மின்சார சபைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இன்று (04) செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் தெரிவித்தார்.

“.. கடந்த 03 மாதங்களுக்குள் 2022ஆம் ஆண்டு மின்சாரத் தேவையுடன் ஒப்பிடுகையில் 22% மின்சாரத் தேவை குறைந்துள்ளது. மேலும் டொலரின் பெறுமதி 375 ரூபாவிலிருந்து 335 ரூபாவாக தற்போது வீழ்ச்சியடைந்துள்ளது.

மேலும் எரிபொருள் விலைகள் ஓரளவு குறைந்துள்ளதை நாம் அறிவோம். உலக சந்தையில் எண்ணெய் விலை மற்றும் நிலக்கரி விலை குறைந்துள்ளது. மின்சாரம் தயாரிக்க நாம் பயன்படுத்தும் ஆதாரங்களின் விலை குறையும் போது.

குறைக்கப்பட்ட மின்கட்டணத்தின் பலனை விரைவில் வழங்க வேண்டும். அதன்படி பெப்ரவரியில் மின் கட்டணம் 60% அதிகரித்ததை நாம் அறிவோம்.

30% குறைக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் பொதுப் பயன்பாட்டு ஆணையம் உள்ளது. அதன்படி, மின் கட்டணத்தை குறைப்பதற்கான முன்மொழிவை விரைவில் அனுப்ப வேண்டும் என கடந்த மார்ச் 30ம் திகதி மின்சார வாரிய தலைவருக்கு சிறப்பு கடிதம் அனுப்பினோம்..”

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இந்தியக் கடற்படை கப்பல் கொழும்பில்

இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான “INS Kalpeni” என்ற கப்பல் இன்று(19) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. கடலோரக் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த 8 அரச வாகனங்கள் மீள ஒப்படைப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் வசமிருந்த 8 அரச வாகனங்கள் மீள ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. முன்னாள்...

தெற்கு அதிவேக வீதியில் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் காலியில் இருந்து கொழும்பு செல்லும் வீதியில் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. வாகனம் ஒன்றில்...