எதிர்வரும் சிங்கள, தமிழ் புத்தாண்டுக்கு பின்னர் 15,000 புதிய லிட்ரோ எரிவாயு சிலிண்டர்கள் பெறப்பட உள்ளதாகவும், அதற்கான கொள்வனவு நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதாகவும் லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்தார்.
அதே இறக்குமதி செலவில் வெற்று எரிவாயு சிலிண்டர்களை மக்களுக்கு வழங்குவதற்கு நிறுவனம் செயல்பட்டு வருவதாகவும், போட்டியிட்ட எரிவாயு நிறுவனத்துடன் ஒப்பிடும்போது இது குறைந்த விலை என்றும் அவர் குறிப்பிட்டார்.