follow the truth

follow the truth

September, 17, 2024
HomeTOP1திருத்தப்பட்ட கட்டணத்தை வசூலிக்காத பேருந்துகள் இன்று முதல் சோதனையிடப்படும்

திருத்தப்பட்ட கட்டணத்தை வசூலிக்காத பேருந்துகள் இன்று முதல் சோதனையிடப்படும்

Published on

டீசல் விலை குறைவினால் திருத்தப்பட்ட பேருந்து கட்டண பட்டியலை காட்சிப்படுத்தாமல் அதிக கட்டணம் வசூலிக்கும் பேருந்துகளை பரிசோதிக்கும் வேலைத்திட்டம் இன்று (03) முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாக மேல்மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பிரசன்ன சஞ்சீவ தெரிவித்தார்.

அதன்படி, திருத்தப்பட்ட பேருந்து கட்டண பட்டியலை அனைத்து பயணிகளும் பார்க்கும் வகையில் காட்சிப்படுத்துவது கட்டாயம் எனவும், அங்கீகரிக்கப்பட்ட பேருந்து கட்டணத்தை விட அதிகமாக வசூலிக்கும் பேருந்துகளை சோதனையிட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தலைவர் மேலும் தெரிவித்தார்.

கடந்த 29ம் திகதி டீசல் விலை குறைக்கப்பட்ட நிலையில், கடந்த 31ம் திகதி முதல் பேருந்து கட்டண திருத்தம் அமுலுக்கு வந்த நிலையில், ஏழு வட்டார அலுவலகங்கள் மூலம் பேருந்து உரிமையாளர்களுக்கு திருத்தப்பட்ட பேருந்து கட்டண பட்டியல் வழங்கப்பட்டது.

ஆனால் தற்போது வரை சில பேருந்துகள் பயணிகளுக்கு தெளிவாக தெரியும் வகையில் ஆவணத்தை காட்டாமல் அதிக கட்டணம் வசூலிக்க ஆசைப்படுவதாக பல்வேறு தரப்பினரிடம் இருந்து முறைப்பாடுகள் வந்ததாக கூறப்படுகிறது.

எனவே எதிர்வரும் 03ஆம் திகதி முதல் மேல்மாகாண டெர்மினல்களில் இருந்து பயணத்தை ஆரம்பிக்கும் அனைத்து பேருந்துகளும் பயணத்தை ஆரம்பிக்கும் முன்னர் திருத்தப்பட்ட கட்டண பட்டியலை கட்டாயம் காட்சிப்படுத்த வேண்டும் எனவும் அவ்வாறு செல்லாத பேருந்துகள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஏதேனும் முறைப்பாடுகள் இருப்பின் மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் 011 2 860 860 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு தலைவர் பிரசன்ன சஞ்சீவ கேட்டுக்கொண்டார்.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வளமான நாடா அல்லது வரிசை யுகமா என்பதை இந்த ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்

வளமான மற்றும் நிலையான பொருளாதாரம் கொண்ட நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமா அல்லது நாட்டை மீண்டும் வரிசை யுகத்திற்கு தள்ளுவதா...

தேர்தல் முறைப்பாடுகள் அதிகரிப்பு

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 184 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதன்படி ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகக்...

இலங்கை இன்னும் பொருளாதார ஆபத்திலிருந்து முழுமையாக மீளவில்லை – தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்

இலங்கை இதுவரை பயணித்த பாதையில் பல முன்னேற்றங்களை அடைந்துள்ளது. ஆனாலும் நாடு இன்னும் பொருளாதார ஆபத்தில் இருந்து மீளவில்லை...