follow the truth

follow the truth

September, 17, 2024
HomeTOP1"திறந்த பல்கலைக்கழகத்தை தனியார்மயமாக்க முயற்சி"

“திறந்த பல்கலைக்கழகத்தை தனியார்மயமாக்க முயற்சி”

Published on

திறந்த பல்கலைக்கழகத்தை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் இருந்து நீக்கி தனியான தனியார் பல்கலைக்கழகமாக பேணுவதற்கான சட்டமூலத்தை நீதி மற்றும் சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தயாரித்துள்ளதாக பல்கலைக்கழக பொது மாணவர் ஒன்றியத்தின் தலைவர் அப்துல்லா மொஹமட் ரிஃபாக் தெரிவித்துள்ளார்.

உயர்கல்வி பாடத்திற்கு தொடர்பில்லாத நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களை பயன்படுத்தி குழுவொன்று நியமிக்கப்பட்டு இந்த சட்டமூலத்தை தயாரித்ததாகவும் தலைவர் தெரிவித்தார்.

உயர்கல்வித் துறை தொடர்பான இந்த வரைவு உயர்கல்வி அமைச்சர் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவரின் பங்களிப்பு இன்றி உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுபல்கலைக்கழகத்தில் வெளி கட்சிகள் இவ்வாறு தலையிட முடியாது எனவும், இந்த சட்டமூலத்திற்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

இதேவேளை, திறந்த பல்கலைக்கழகக் கட்டணங்கள் 55 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளமையினால் மாணவர்கள் மிகவும் அவதியுறுவதாகவும் தலைவர் தெரிவித்தார்.

பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் 34,000 மாணவர்களில் 40 வீதமானோர் தமது கற்கைநெறிகளை கைவிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுதவிர, கென்டீன் பிரச்சினை, விடுதி பிரச்சினை, கருத்துக் கட்டுப்பாடு உள்ளிட்ட பல பிரச்சினைகளை பல்கலைகழகத்தில் மாணவர்கள் சந்தித்து வருவதாக அப்துல்லா முகமது ரிஃபாக் தெரிவித்தார்.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வளமான நாடா அல்லது வரிசை யுகமா என்பதை இந்த ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்

வளமான மற்றும் நிலையான பொருளாதாரம் கொண்ட நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமா அல்லது நாட்டை மீண்டும் வரிசை யுகத்திற்கு தள்ளுவதா...

தேர்தல் முறைப்பாடுகள் அதிகரிப்பு

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 184 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதன்படி ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகக்...

இலங்கை இன்னும் பொருளாதார ஆபத்திலிருந்து முழுமையாக மீளவில்லை – தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்

இலங்கை இதுவரை பயணித்த பாதையில் பல முன்னேற்றங்களை அடைந்துள்ளது. ஆனாலும் நாடு இன்னும் பொருளாதார ஆபத்தில் இருந்து மீளவில்லை...