follow the truth

follow the truth

September, 21, 2024
HomeTOP1சர்வதேச நாணய நிதியத்தின் தேவை எங்களுக்கு இல்லை - அஜித் நிவார்ட் கப்ரால்

சர்வதேச நாணய நிதியத்தின் தேவை எங்களுக்கு இல்லை – அஜித் நிவார்ட் கப்ரால்

Published on

பொருளாதார உதவிக்காக சர்வதேச நாணய நிதியத்தை (ஐஎம்எஃப்) அணுக வேண்டிய அவசியம் இலங்கைக்கு இல்லை என்று இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் இன்று (14)
மீண்டும் வலியுறுத்தினார்.

எங்களுடைய கடன்களை நாங்கள் திருப்பிச் செலுத்துவோம். எனவே சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் எங்களுக்கு
இல்லை என்று குறிப்பிட்டார்

அரசாங்கத்தின் உடன்படிக்கைகள் உட்பட பல வெளிநாட்டு வரவுகள் இலங்கையின் பொருளாதார நிலைமைகளுக்கு உதவும் என்று
எதிர்பார்க்கப்படுவதாக ஆளுநர் குறிப்பிட்டார்.

இலங்கையின் சுற்றுலாத் துறையும் இந்த டிசம்பர் மாதத்திற்குள் புத்துயிர் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று கப்ரால் மேலும் கூறினார்.

இதற்கிடையில், மத்திய வங்கியின் நிலையான வைப்பு வசதி விகிதம் மற்றும் நிலையான கடன் வசதி விகிதத்தை முறையே 5.00 சதவீதம்
மற்றும் 6.00 சதவீதமாக பராமரிக்க நாணய வாரியம் முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வாக்களிப்பு நிலையங்களுக்கு விசேட பாதுகாப்பு

நாடளாவிய ரீதியாக ஸ்தாபிக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையங்களுக்கு அண்மித்த பகுதிகளில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தேர்தல் பாதுகாப்பு கடமைகளுக்காக...

இலங்கையில் இன்று ஜனாதிபதி தேர்தல்

இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று(21) நடைபெறுகிறது. இம்முறை ஜனாதிபதி தேர்தலில் 39...

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு – மூவர் பணி நீக்கம்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளை புகைப்படம் எடுத்து வட்ஸ்அப் மூலம் பகிர்ந்த சம்பவம் தொடர்பில் அனுராதபுரம் ரத்மலே...