follow the truth

follow the truth

September, 20, 2024
Homeஉலகம்19 மாதங்களுக்குப் பின் திறக்கப்படும் கனடா, மெக்சிகோ எல்லை

19 மாதங்களுக்குப் பின் திறக்கப்படும் கனடா, மெக்சிகோ எல்லை

Published on

19 மாதங்களுக்குப் பின் கனடா, மெக்சிகோ ஆகியவற்றுடனான எல்லையை பயணிகள் தரைவழிப் போக்குவரத்துக்காக எதிர்வரும் நவம்பர் மாதம் திறக்கவுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த வருடம் மார்ச் மாதத்தில் கனடா, மெக்சிகோ நாடுகளுடனான எல்லைகளை அமெரிக்கா மூடியது.

அதன்பின் இன்றியமையாப் பொருட்களைக் கொண்டுசெல்லவும், இன்றியமையாப் பணிகளுக்குச் சிறப்பு அனுமதி பெற்றுச் செல்லவும் அனுமதிக்கப்பட்டது.

கொரோனா தடுப்பூசி பெற்றுக் கொண்ட வெளிநாட்டவர் நவம்பர் முதல் கனடா, மெக்சிகோ நில எல்லை வழியாக அமெரிக்காவுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கனடாவில் வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா கட்டுப்பாடு

வெளிநாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கைகள் குறைக்கப்படும் என்று கனடா பிரதமர் ட்ரூடோ அறிவித்தார். உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை அதிகரிக்க இந்த நடவடிக்கை...

தேர்தலை நடத்தக் கோரி பங்களாதேஷில் ஆர்ப்பாட்டம்

ஜனநாய ரீதியிலான அரசியல் பரிமாற்றம் ஒன்றைக் கோரி பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் ஆயிரக்கணக்கான செயற்பாட்டாளர்கள் மற்றும் எதிர்க்கட்சியான பங்களாதேஷ்...

சிம்பாப்வேயில் கடும் வறட்சி – 200 யானைகளை கொன்று மக்களுக்கு உணவளிக்க திட்டம்

கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத வகையில் வாட்டி வதைத்து வரும் கடும் வறட்சி காரணமாக ஆபிரிக்க நாடான சிம்பாப்வேயில்...