follow the truth

follow the truth

September, 21, 2024
Homeஉள்நாடுகொழும்பிற்கு பயணிக்கும் வாகன சாரதிகளுக்கான அறிவித்தல்

கொழும்பிற்கு பயணிக்கும் வாகன சாரதிகளுக்கான அறிவித்தல்

Published on

புதிய களனி பாலத்தில் இறுதிக்கட்ட கட்டுமான பணிகள் காரணமாக ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மாற்று வீதிகளை பயன்படுத்தமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

களனி பாலத்தில் கட்டுமான பணிகள் காரணமாக பேஸ்லைக் வீதி மற்றும் துறைமுக நுழைவு வீதி ஆகிய பகுதிகளில் காலை மற்றும் மாலை வேலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதற்கமைய, பின்வரும் வீதிகளை பயன்படுத்தி, போக்குவரத்து நெரிசலை குறைத்துக்கொள்ளுமாறு பொதுமக்கள் மற்றும் சாரதிகளிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கண்டி வீதியினூடாக கொழும்புக்கு பிரவேசிக்கும் வாகனங்கள் பேஸ்லைன் வீதியில் பயணிக்காமல், நவலோக்க சுற்றிவட்டத்தின் ஊடாக தொட்டலங்க சந்தி, ப்ரின்ஸ் ஒஃப் வேல்ஸ் வீதி அல்லது ப்ளூமெண்டல் வீதியினூடாக கொழும்புக்கு பிரவேசிக்க முடியும்.

நீர்கொழும்பு வீதியினூடாக வருகைதரும் வாகனங்கள் கதிரான பாலம், அளுத்மாவத்தை வழியாக கொழும்புக்கு பிரவேசிக்க முடியும்.

பழைய அவிசாவளை வீதியினூடாக வருகைதரும் வாகனங்கள் ஸ்டேஸ் வீதி, கொஸ்கஸ் சந்தி, லேயார்ட்ஸ் ப்ரோட்வே (Lyards Broadway_) வீதியினூடாக ப்ரின்ஸ் ஒஃப் வேல்ஸ் வீதி (Prince of Wales Avenue) ஊடாக பிரவேசிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு – மூவர் பணி நீக்கம்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளை புகைப்படம் எடுத்து வட்ஸ்அப் மூலம் பகிர்ந்த சம்பவம் தொடர்பில் அனுராதபுரம் ரத்மலே...

கொழும்பில் காச நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

மேல் மாகாணத்தில் காச நோயாளர்களின் எண்ணிக்கை 46 சதவீதமாக அதிகரித்துள்ளதாக காசநோய் கட்டுப்பாடு மற்றும் மார்பு நோய்களுக்கான தேசிய...

ரயில் சேவைகளில் மாற்றம் இல்லை

ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்பு இடம்பெறும் நாளைய தினம் ரயில் சேவைகள் வழமைப் போன்று இடம்பெறுமென ரயில்வே பிரதி பொதுமுகாமையாளர்...