கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த உதயதேவி புகையிரதத்தை மறித்து மட்டக்களப்பு சுவிஸ் கிராம பகுதியில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக மட்டக்களப்புக்கான ரயில் போக்குவரத்து பாதிப்படைந்துள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
தங்களது கிராமத்துக்கு செல்லும் வீதிக்கு தடை விதிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து சுவிஸ் கிராம மக்களால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.