follow the truth

follow the truth

September, 21, 2024
Homeஉள்நாடுபிணைமுறி மோசடி தொடர்பில் சட்டமா அதிபர் விடுத்துள்ள கோரிக்கை

பிணைமுறி மோசடி தொடர்பில் சட்டமா அதிபர் விடுத்துள்ள கோரிக்கை

Published on

தற்போது வெளிநாட்டில் உள்ளதாகக் கருதப்படும் மத்திய வங்கி முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் மற்றும் பேர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் பணிப்பாளர்களுள் ஒருவரான கார்திய புஞ்சிஹோ ஆகிய பிரதிவாதிகளின்றி மத்திய வங்கி பிணைமுறி மோசடி வழக்கை முன்னெடுத்துச் செல்ல அனுமதியளிக்குமாறு கொழும்பு நிரந்தர நீதாய மேல் நீதிமன்றிடம் சட்டமா அதிபர் கோரியுள்ளார்.

இந்த வழக்கு இன்று, நீதிபதிகளான சம்பா ஜானகி ராஜரத்ன, தமித் தொட்டவத்த மற்றும் நாமல் பலல்லே ஆகியோரடங்கிய ஆயத்தின் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டபோதே, அவர் இந்த கோரிக்கையை முன்வைத்தார்.

மத்திய வங்கி முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் மற்றும் பேர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் பணிப்பாளர்களுள் ஒருவரான அஜஹான் கார்திய புஞ்சிஹோ 2015 பெப்ரவரி மாதத்தில் இடம்பெற்ற மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பான வழக்கின் சந்தேகநபர்களாக பெயரிடப்பட்டுள்ளனர்.

மேற்படி இருவரும் தற்போது வெளிநாட்டில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு – மூவர் பணி நீக்கம்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளை புகைப்படம் எடுத்து வட்ஸ்அப் மூலம் பகிர்ந்த சம்பவம் தொடர்பில் அனுராதபுரம் ரத்மலே...

கொழும்பில் காச நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

மேல் மாகாணத்தில் காச நோயாளர்களின் எண்ணிக்கை 46 சதவீதமாக அதிகரித்துள்ளதாக காசநோய் கட்டுப்பாடு மற்றும் மார்பு நோய்களுக்கான தேசிய...

ரயில் சேவைகளில் மாற்றம் இல்லை

ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்பு இடம்பெறும் நாளைய தினம் ரயில் சேவைகள் வழமைப் போன்று இடம்பெறுமென ரயில்வே பிரதி பொதுமுகாமையாளர்...