நிதி அமைச்சிலிருந்து பதில் தராவிட்டால் எரிபொருள் விலை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படும் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
1 லீற்றர் பெற்றோலின் விலை 15 ரூபாவினாலும்
டீசலை 25 ரூபாவினாலும் அதிகரிக்க IOC நிறுவனம் அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் எரிபொருள் அதிகரிப்பது தொடர்பில் பெற்றோலிய கூட்டுத் தாபனமும் கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
குறித்த கோரிக்கைகள் தொடர்பில் பரிசீலித்து வருவதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.