follow the truth

follow the truth

September, 21, 2024
Homeஉள்நாடுவாகன வருமான வரி பத்திர விநியோகம் இடைநிறுத்தம்

வாகன வருமான வரி பத்திர விநியோகம் இடைநிறுத்தம்

Published on

மேல் மாகாணத்தில் வாகன வருமான வரி அனுமதி பத்திரங்களை வழங்கும் நடவடிக்கை இன்று (13) முதல் இரண்டு வாரத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வாகன வருமான வரி அனுமதிப்பத்திரங்களை வெளியிடும் கணினி கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கணினி கட்டமைப்பை வழமைக்கு கொண்டு வரும் வரை தற்காலிகமாக மேல் மாகாணத்தில் வாகன அனுமதி பத்திரங்களை வழங்கும் நடவடிக்கை இன்று முதல் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை இடை நிறுத்தப்படும்.

இதேவேளை, நேற்று முதல் காலாவதியாகும் வாகன அனுமதிப் பத்திரங்களை வழங்கும் நடவடிக்கையும், டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் பெறவேண்டிய அனுமதி பத்திரங்களும் இம்மாதம் 27 ஆம் திகதி முதல் பல இடங்களில் வழங்கப்படும்.

மேல் மாகாண மோட்டார் வாகன திணைக்களம், களுத்துறை கம்பஹா மற்றும் கொழும்பு மாவட்டங்களின் பிரதேச செயலகங்கள் ஆகிய இடங்களில் இந்த நடவடிக்கை இடம்பெறும் என மேல் மாகாண ஆளுநர் அலுவலகம் அறிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு – மூவர் பணி நீக்கம்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளை புகைப்படம் எடுத்து வட்ஸ்அப் மூலம் பகிர்ந்த சம்பவம் தொடர்பில் அனுராதபுரம் ரத்மலே...

கொழும்பில் காச நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

மேல் மாகாணத்தில் காச நோயாளர்களின் எண்ணிக்கை 46 சதவீதமாக அதிகரித்துள்ளதாக காசநோய் கட்டுப்பாடு மற்றும் மார்பு நோய்களுக்கான தேசிய...

ரயில் சேவைகளில் மாற்றம் இல்லை

ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்பு இடம்பெறும் நாளைய தினம் ரயில் சேவைகள் வழமைப் போன்று இடம்பெறுமென ரயில்வே பிரதி பொதுமுகாமையாளர்...