சுதந்திரம் கிடைத்ததன் பின்னர் மக்கள் வயிற்றைப் பற்றி சிந்திக்கிறார்களே தவிர நாட்டைப் பற்றி யோசிக்கவில்லை என ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சித் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் வைத்தே அவர் இதனைத் தெரிவித்தார்.
வயிற்றை பற்றி மாத்திரம் சிந்தித்துவிட்டு நாட்டை பற்றி சிந்திக்காமல் விட்டுவிட்டால் எதிர்கால சந்ததியினரின் சாபத்திற்கு நாம் அனைவரும் உள்ளாக நேரிடும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
உலக பொருளாதாரம் தற்போது பாரிய நெருக்கடி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதால் அதன் தாக்கம் இலங்கைக்கும் ஏற்படும் எனவும், அவ்வாறு நேரிடும் போது அதனை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.