எரிபொருளின் விலை அதிகரிக்கப்படும் பட்சத்தில், பஸ் கட்டணத்தையும் அதிகரிக்க வேண்டிய நிலைமை ஏற்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்
கடந்த காலங்களில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில், கலந்துரையாடல்களை நடத்தி பஸ் கட்டணத்தை அதிகரிக்கவில்லை எனினும் இம்முறை எரிபொருள் விலை அதிகரிக்கப்படும் பட்சத்தில், பஸ் உரிமையாளர்களுக்கு பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டிய நிலைமை ஏற்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், தற்போதைய சூழ்நிலையில் அவ்வாறான ஒரு நிலைமை கிடையாது எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.
டீசலுக்கான விலையை உயர்வை அரசாங்கம் பொறுப்பேற்று, பஸ் கட்டண்த்தை அதிகரிக்காமல் இருப்பது அதை விட அபாயகரமானது என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்