follow the truth

follow the truth

March, 14, 2025
HomeTOP1ஏனைய பரீட்சைகளும் ஒத்திவைக்கப்படும் அபாயம்

ஏனைய பரீட்சைகளும் ஒத்திவைக்கப்படும் அபாயம்

Published on

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டை திட்டமிட்டபடி முடிக்க முடியாவிட்டால் சாதாரண தரப் பரீட்சையும் மீண்டும் பிற்போடப்படும் அபாயம் ஏற்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று (09) பாராளுமன்ற உறுப்பினர் புத்திக்க பத்திரன எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“குறிப்பிட்ட நேரத்தில் பரீட்சை விடைத்தாள்களை சரிபார்த்து முடிக்க வேண்டும். இல்லை என்றால் முடிவுகள் தாமதமாகும். அப்படி நடந்தால் அடுத்த பரீட்சை தள்ளிப்போகும். அப்படி நடந்தால் வழமையான பரீட்சைகள் பாதிக்கலாம்.

எனவே தான் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க சம்மதிக்க வேண்டும் என்று நேற்று நான் சந்தித்த உங்கள் அனைவருக்கும் மற்றும் தொழிற்சங்கத்தினரிடம் கோரிக்கை வைத்துள்ளேன். ஒரு அமைச்சு என்ற வகையில் எம்மால் இயன்றளவு செய்துள்ளோம்.

எனவே, குறிப்பாக இந்த மாணவர்களுக்கு நல்ல பதிலை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். ஏனெனில் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் குறிப்பிட்ட அளவிற்கு கொடுப்பனவுகளை அதிகரித்தோம்.

அதை பரிசீலித்து இரண்டு முறை மாணவர்களுக்கு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்து அதிகாரப்பூர்வமாக சந்தித்து இருக்கிறேன். முறைசாரா முறையில் அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது” என்றார்.

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் உயர்தர விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகளில் மாத்திரமன்றி கல்வி நடவடிக்கைகளிலும் ஈடுபடுவதில்லை என உறுப்பினர் புத்திக பத்திரன இங்கு தெரிவித்திருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது

மூதூர் - தாஹாநகர் பகுதியில் இரண்டு பெண்கள் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், இருவரினதும் பேர்த்தியான 15 வயது சிறுமி...

எம்.பி பதவியை இராஜினாமா செய்தார் சாலி நளீம்

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் முஹம்மட் சாலி நழீம் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தவதாக...

ஜனாதிபதிக்கும் தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று(14) ஜனாதிபதி அலுவலகத்தில்...