follow the truth

follow the truth

March, 15, 2025
Homeஉள்நாடுமீண்டும் கொரோனா கொத்தணிகள் ஏற்படும் அபாயம்

மீண்டும் கொரோனா கொத்தணிகள் ஏற்படும் அபாயம்

Published on

வழிபாட்டுத் தலங்கள் உட்பட ஏனைய இடங்களில் மக்கள் கூடுவதால் மீண்டும் கொரோனா கொத்தணிகள் ஏற்படும் அபாயம் உள்ளது என சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.

எனவே, மத வழிபாடுகளில் ஈடுபடும்போது சுகாதார ஆலோசனையைப் பின்பற்றுவது முக்கியம் என சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் டாக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

இதேவேளை, கொவிட் பரவலை தடுப்பதற்காக பிறப்பிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை நீக்குவதன் ஊடாக வைரஸ் பரவல் வேகமாக அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் விஷேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

பழைய இயல்பு நிலைக்கு மீண்டும் திரும்ப முடியும் என்று தான் நம்பவில்லை எனத் தெரிவித்த அவர் தாம் ஒரு புதிய இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும் எனவும், அதற்கு பல தசாப்தங்கள் ஆகலாம் எனவும் கூறினார்.

எனவே தாம் பாதுகாப்பாக இருக்க ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை பின்பற்றுவது முக்கியம் எனவும், அவர் தெரிவித்தார்.

 

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதியின் பங்கேற்புடன் சிறப்பு இப்தார் நிகழ்வு

முஸ்லிம்களின் புனித ரமழான் நோன்பு மாதத்தையிட்டு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பங்கேற்புடன் இப்தார் நிகழ்வு இன்று (14)...

அம்பலாங்கொடை துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

அம்பலாங்கொடை இடம்தொட்ட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் அம்பலாங்கொடை, இடம்தோட்டை பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையவர்...

மாணவர்களுக்கு வழங்கப்படும் 6,000 ரூபா வவுச்சரின் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு

பாடசாலை மாணவர்களுக்கு உபகரணம் பெற்றுக் கொள்வதற்காக வழங்கப்பட்டுள்ள 6000 ரூபா வவுச்சரின் செல்லுபடியாகும் காலம் மார்ச் 31 ஆம்...