follow the truth

follow the truth

September, 20, 2024
Homeஉள்நாடுமீண்டும் கொரோனா கொத்தணிகள் ஏற்படும் அபாயம்

மீண்டும் கொரோனா கொத்தணிகள் ஏற்படும் அபாயம்

Published on

வழிபாட்டுத் தலங்கள் உட்பட ஏனைய இடங்களில் மக்கள் கூடுவதால் மீண்டும் கொரோனா கொத்தணிகள் ஏற்படும் அபாயம் உள்ளது என சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.

எனவே, மத வழிபாடுகளில் ஈடுபடும்போது சுகாதார ஆலோசனையைப் பின்பற்றுவது முக்கியம் என சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் டாக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

இதேவேளை, கொவிட் பரவலை தடுப்பதற்காக பிறப்பிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை நீக்குவதன் ஊடாக வைரஸ் பரவல் வேகமாக அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் விஷேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

பழைய இயல்பு நிலைக்கு மீண்டும் திரும்ப முடியும் என்று தான் நம்பவில்லை எனத் தெரிவித்த அவர் தாம் ஒரு புதிய இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும் எனவும், அதற்கு பல தசாப்தங்கள் ஆகலாம் எனவும் கூறினார்.

எனவே தாம் பாதுகாப்பாக இருக்க ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை பின்பற்றுவது முக்கியம் எனவும், அவர் தெரிவித்தார்.

 

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொழும்பில் காச நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

மேல் மாகாணத்தில் காச நோயாளர்களின் எண்ணிக்கை 46 சதவீதமாக அதிகரித்துள்ளதாக காசநோய் கட்டுப்பாடு மற்றும் மார்பு நோய்களுக்கான தேசிய...

ரயில் சேவைகளில் மாற்றம் இல்லை

ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்பு இடம்பெறும் நாளைய தினம் ரயில் சேவைகள் வழமைப் போன்று இடம்பெறுமென ரயில்வே பிரதி பொதுமுகாமையாளர்...

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் இன்று வெளியீடு

2023 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் இன்று (20)...