பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு 70 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
அதன் காரணமாக, எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இன்று (11) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் குறித்து, விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் அவதானம் செலுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.