பல்கலைக்கழக மாணவர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்று (11) முதல் ஆரம்பமாகவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
17 பல்கலைகழகங்கள் மற்றும் வளாகங்களிலும் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
இதன்போது 20 – 30 வயதுக்கிடைப்பட்ட கல்விசார் மற்றும் கல்விசாரா ஊழியர்களும் தமக்குரிய தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ள முடியுமென பேராசிரியர் மேலும் கூறியுள்ளார்.