follow the truth

follow the truth

September, 20, 2024
HomeTOP1விவசாயிகள் மீது காரை ஏற்றி 9 பேர் பலி : மத்திய அமைச்சர் மகன் ஆசிஷ்மிஸ்ரா...

விவசாயிகள் மீது காரை ஏற்றி 9 பேர் பலி : மத்திய அமைச்சர் மகன் ஆசிஷ்மிஸ்ரா கைது

Published on

உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்புரில் விவசாயிகள் மீது காரை ஏற்றி 4 பேர் உயிரிழக்கக் காரணமாக இருந்த மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ்மிஸ்ராவிடம் 12 மணி நேரம் விசாரணை நடத்திய பின்னர் பொலிசார் கைது செய்தனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்புர் கேரியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை விவசாயிகள் போராட்டம் நடத்திக் கொண்டிருந்த போது, மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ராவின் கார் விவசாயிகள் கூட்டத்தில் மோதியது. இதைத் தொடர்ந்து நிகழ்ந்த வன்முறையில் 4 விவசாயிகள் உள்பட 9 பேர் பலியாயினர்.

நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இச்சம்பவத்தை கண்டித்து பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. ஆசிஷ் மிஸ்ரா மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் 2 பேர் மட்டும் கடந்த வியாழன் கைது செய்யப்பட்டனர்.

இந்த விவகாரத்தில் ஆசிஷ் மிஸ்ரா இன்னும் கைது செய்யப்படாமல் இருப்பதற்கு உச்சநீதிமன்றம் கடுமை காட்டியதைத் தொடர்ந்து, விசாரணைக்கு ஆஜராக ஆசிஷ்மிஸ்ராவுக்கு 2 ஆவது முறையாக சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி நேற்று காலை 11 மணிக்கு ஆஜரான அசிஷ் மிஸ்ராவிடம் போலீசார் இரவு 11 மணி வரை சுமார் 12 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

சில கேள்விகளுக்கு பதில் அளிக்காததுடன், விசாரணைக்கு ஒத்துழைப்பும் அளிக்காததால் அசிஷ் மிஸ்ராவை கைது செய்துள்ளதாக டிஐஜி உபேந்திர அகர்வால் தெரிவித்தார். பின்னர் நீதிபதி முன், ஆசிஷ் மிஸ்ரா ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டுகள் விநியோகிக்கும் பணிகள் நாளை ஆரம்பம்

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டு உள்ளிட்ட தேர்தலுக்கான சகல ஆவணங்களையும் விநியோகிக்கும் பணிகள் நாளை காலை முதல் ஆரம்பிக்கப்படும்...

கனடாவில் வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா கட்டுப்பாடு

வெளிநாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கைகள் குறைக்கப்படும் என்று கனடா பிரதமர் ட்ரூடோ அறிவித்தார். உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை அதிகரிக்க இந்த நடவடிக்கை...

உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு கோரிக்கை

ஜனாதிபதி தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகும் வரை உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆனந்த...