follow the truth

follow the truth

February, 5, 2025
Homeஉலகம்அமெரிக்கா செல்ல பிற நாட்டினருக்கு அனுமதி

அமெரிக்கா செல்ல பிற நாட்டினருக்கு அனுமதி

Published on

நவம்பர் மாதத்தில் இருந்து பிற நாட்டைச் சேர்ந்தவர்கள் அமெரிக்கா செல்ல அனுமதிக்கப்படுவர் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக பிரிட்டன், ஐரோப்பிய யூனியன் மற்றும் பிற நாடுகளில் இருந்து அமெரிக்காவினுள் வருவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா வருவோர் தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழை வைத்திருக்க வேண்டும். அதோடு, பயணத்திற்கு 3 நாள்கள் முன்பாக எடுக்கப்பட்ட பரிசோதனையில் கொரோனா இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதற்கான சான்றிதழை வைத்திருப்பது அவசியம்.

மேலும் அவர்களோடு தொடர்பில் இருந்தவர்கள் குறித்த விவரங்களை தர வேண்டும் எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் குழந்தைகளுக்கு இத்தகைய கட்டுப்பாடுகள் பொருந்தாது எனவும் அமெரிக்கா அறிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

1967 எல்லைகளின் அடிப்படையில் பலஸ்தீன் தனி நாட்டை உருவாக்க வேண்டும் – அதுவே எம் நிலைப்பாடு – அமெரிக்காவுக்கு சவுதி இளவரசர் பதில்

கிழக்கு ஜெரூசலத்தை தலைநகராக கொண்ட சுயாதீன தனியான பலஸ்தீன் நாட்டை உருவாக்க சவுதி அரேபியா தொடர்ந்தும் முயற்சி செய்யும்...

இராணுவ விமானம் மூலம் இந்தியர்களை நாடு கடத்திய அமெரிக்கா

அமெரிக்காவில் சட்ட விரோதமாகக் குடியேறிய, இந்தியாவை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் அந்நாட்டின் இராணுவ விமானம் மூலம் இன்று பஞ்சாப்...

USAID இன் பணியாளர்களுக்கு வெள்ளிக்கிழமை முதல் நிர்வாக விடுமுறை

உலகளாவிய ரீதியிலுள்ள USAID எனப்படும் அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்திக்கான முகவரகத்தின் பணியாளர்கள், எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் நிர்வாக விடுமுறையில்...