18 மற்றும் 19 வயதுடைய பாடசாலை மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசியை பெற்றுக் கொடுக்குமாறு ஜனாதிபதி உரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இதற்கமைய எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் 18 மற்றும் 19 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கான தடுப்பூசி வழங்கும் பணிகள் அவர்களுக்கான பாடசாலைகளில் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
மேலும், 18, 19 வயதுடைய பாடசாலைக்கு செல்லாதவர்களுக்கு அருகில் உள்ள சுகாதார பணிமனைகளிலும் தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.