முன்னாள் அமைச்சர் நிருபமா ராஜபக்ஸவின் கணவரான திருகுமார் நடேசன், இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் இன்று (08) ஆஜராகியுள்ளார்.
திருக்குமார் நடேசனை இன்று காலை முன்னிலையாகுமாறு அறிவுறுத்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் அப்சரா கல்தெரா தெரிவித்துள்ளார்.
முறையற்ற விதத்தில் சொத்து சேகரித்ததாக சர்வதேச புலனாய்வு ஊடகவியலாளர்கள் அமைப்பினால், பண்டோரா பேப்பர்ஸ் என்ற ஆவணங்கள் வெளியிடப்பட்டிருந்தன.
இந்த ஆவணங்களில் திருக்குமார் நடேசனின் பெயரும் உள்வாங்கப்பட்டிருந்தது.