follow the truth

follow the truth

September, 20, 2024
Homeஉள்நாடு"மக்களுடன் இணைந்து போராடவும் தயார்" - சுதந்திரக் கட்சி

“மக்களுடன் இணைந்து போராடவும் தயார்” – சுதந்திரக் கட்சி

Published on

தபால் மூல வாக்களிப்பை பிற்போடுவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு கட்சி என்ற ரீதியில் எதிர்ப்பு தெரிவிக்கிறோம் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரசார செயலாளர் திசர குணசிங்க தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு நாடு முழுவதும் அக்கட்சி நடத்தும் தொடர் பேரணிகள் ஜனநாயகத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான தொடர் போராட்டமாக மாற்றப்படும் என்றும் அவர் கூறினார்.

தபால் மூல வாக்களிப்பை ஒத்திவைத்து உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைக்க முயற்சித்தால், ஜனநாயக வாக்களிக்கும் உரிமையை வென்றெடுப்பதற்காக மக்களுடன் இணைந்து போராடவும் தயங்கப் போவதில்லை எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மக்கள் தமது பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கான ஜனநாயக உரிமை மதிக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டுகள் விநியோகிக்கும் பணிகள் நாளை ஆரம்பம்

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டு உள்ளிட்ட தேர்தலுக்கான சகல ஆவணங்களையும் விநியோகிக்கும் பணிகள் நாளை காலை முதல் ஆரம்பிக்கப்படும்...

உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு கோரிக்கை

ஜனாதிபதி தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகும் வரை உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆனந்த...

ஜனாதிபதித் தேர்தல் – பாதுகாப்பிற்காக முப்படைகளும் இணக்கம்

ஜனாதிபதித் தேர்தலின் போது அமுல்படுத்தப்பட வேண்டிய இறுதி பாதுகாப்பு வேலைத்திட்டம் பொலிஸ்மா அதிபர்களுக்கு இன்று (19) வழங்கப்பட்டதாக பொது...