follow the truth

follow the truth

September, 20, 2024
Homeஉள்நாடுஅனுஷ்கா சஞ்சீவனிக்கு ஐசிசி அபராதம்

அனுஷ்கா சஞ்சீவனிக்கு ஐசிசி அபராதம்

Published on

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் விக்கெட் காப்பாளர் அனுஷ்கா சஞ்சீவனிக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அபராதம் விதித்துள்ளது.

பெண்கள் 2020 போட்டியில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியின் போது சபையின் ஒழுங்கு விதிகளை மீறியமையே இதற்குக் காரணம்.

இந்த ஆண்டு மகளிர் டி20 உலகக் கிண்ணத்தில் பங்களாதேஷ் அணிக்கெதிரான போட்டியில் இலங்கை விக்கெட் காப்பாளர் அனுஷ்கா சஞ்சீவனி தனது ஒழுக்கக் குறியீட்டில் முதல் நிலைக் குற்றத்தைச் செய்ததாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.

அந்த போட்டியின் பங்களாதேஷ் இன்னிங்ஸின் 10 வது ஓவரில் சோபனா மோஸ்டெரி ஆட்டமிழந்த பிறகு, அனுஷ்கா சஞ்சீவனி ஆட்டமிழந்த பேட்ஸ்மேனை அணுகி ஆக்ரோஷமாக கத்தியமை ஒழுக்கமின்மை குற்றச்சாட்டுக்கு ஆளானார்.

அதன்படி, அவர் விளையாட்டு வீரர்களின் ஒழுங்கு விதி 2.5 இனை மீறியதாக ஐசிசி அறிவித்தது.

அவருக்கு போட்டி கட்டணத்தில் 15% அபராதம் விதிக்க சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடவடிக்கை எடுத்துள்ளது.

அபராதத்துடன், அனுஷ்கா சஞ்சீவனியின் ஒழுக்காற்றுப் பதிவில் பெனால்டி குறியும் சேர்க்கப்பட்டுள்ளது.

இவரின் தவறுக்கும் போட்டிக்கும் நடுவராக செயல்பட்ட ஜி. எஸ். லக்ஷ்மி விதித்த தண்டனையை அவர் ஏற்றுக்கொண்டதால், இந்த வழக்கில் இனி விசாரணை இருக்காது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டுகள் விநியோகிக்கும் பணிகள் நாளை ஆரம்பம்

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டு உள்ளிட்ட தேர்தலுக்கான சகல ஆவணங்களையும் விநியோகிக்கும் பணிகள் நாளை காலை முதல் ஆரம்பிக்கப்படும்...

உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு கோரிக்கை

ஜனாதிபதி தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகும் வரை உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆனந்த...

ஜனாதிபதித் தேர்தல் – பாதுகாப்பிற்காக முப்படைகளும் இணக்கம்

ஜனாதிபதித் தேர்தலின் போது அமுல்படுத்தப்பட வேண்டிய இறுதி பாதுகாப்பு வேலைத்திட்டம் பொலிஸ்மா அதிபர்களுக்கு இன்று (19) வழங்கப்பட்டதாக பொது...