follow the truth

follow the truth

September, 19, 2024
Homeஉள்நாடுதேர்தல் ஒத்திவைப்பு மனுவை வரும் 23ம் திகதிக்கு முன் பரிசீலிக்க மனு

தேர்தல் ஒத்திவைப்பு மனுவை வரும் 23ம் திகதிக்கு முன் பரிசீலிக்க மனு

Published on

நாட்டில் தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், உத்தேச உள்ளூராட்சி மன்ற தேர்தலை ஒத்திவைக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு ஓய்வுபெற்ற இராணுவ கேணல் டபிள்யூ. எம். ஆர். விஜேசுந்தரவினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை தபால் மூல வாக்களிப்பு ஆரம்பமாவதற்கு முன்னர் திறந்த நீதிமன்றில் அழைக்குமாறு கோரி உச்ச நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மனுதாரர் தரப்பு வழக்கறிஞர்கள் நேற்று இந்த மனுவை தாக்கல் செய்தனர். குறித்த மனு கடந்த வெள்ளிக்கிழமை எஸ். துரைராஜா, ஏ.எச்.எம்.டி. நவாஸ் மற்றும் ஷிரான் குணரத்ன ஆகிய மூவரடங்கிய உச்ச நீதிமன்ற குழாம் முன்னிலையில் பரிசீலனை செய்யப்பட்டு, மேலதிக விசாரணைகள் எதிர்வரும் 23ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

ஆனால் தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் 22ஆம் திகதி நடைபெறும் எனத் தகவல் வெளியாகியுள்ளதாக பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, மேலதிக பரிசீலனைக்காக தபால் வாக்கெடுப்புக்கு முன்னர் இது தொடர்பான மனுவை இம்மாதம் 17, 20 அல்லது 21 ஆம் திகதிகளில் ஒத்திவைக்குமாறு கோரப்பட்டுள்ளதாக எமது நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.

மேலும் இது தொடர்பான உண்மைகளை உறுதி செய்ய, சம்பந்தப்பட்ட மனு எஸ். துரைராஜா, ஏ.எச்.எம்.டி.நவாஸ் அல்லது ஷிரான் குணரத்ன ஆகிய மூவரில் ஒருவரான நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இம்மாதம் 14, 15 அல்லது 16ஆம் திகதிகளில் திறந்த நீதிமன்றில் உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும் என அந்த மனுவில் மேலும் கோரப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைக்கும் உத்தரவை பிறப்பிக்கக் கோரி ஓய்வுபெற்ற கேணல் தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை அழைக்கப்பட்ட போது, ​​தேர்தல்கள் ஆணைக்குழு சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், சட்ட அடிப்படை இல்லை எனத் தெரிவித்து ஆரம்ப ஆட்சேபனைகளை முன்வைத்தார்.

மனுதாரர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி பாய்ஸ் முஸ்தபா ஆரம்ப ஆட்சேபனைகளுக்கு பதிலளிக்கும் போது வழக்கின் ஆவணங்கள் தொடர்பில் தெளிவின்மை ஏற்பட்டுள்ளதால் அதன் மேலதிக விசாரணையை எதிர்வரும் 23ஆம் திகதிக்கு ஒத்திவைக்க நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வாக்கெடுப்பு, வாக்கெண்ணும் நிலையங்களுக்குள் செய்யக்கூடாதவை

வாக்கெடுப்பு நிலையங்களுக்குள் மற்றும் வாக்கெண்ணும் நிலையங்களுக்குள் தடை விதிக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவினால் முக்கிய அறிவித்தல் ஒன்று...

விசேட தேவையுடையவர்களுக்கு வாக்களிப்பு நிலையங்களில் சிறப்பு ஏற்பாடுகள்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் விசேட தேவையுடையவர்கள் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ...

வாக்களிக்கச் செல்பவர்களுக்காக விசேட பஸ் சேவை

ஜனாதிபதித் தேர்தலுக்கு வாக்களிக்கச் செல்லும் பயணிகளுக்காக இலங்கை போக்குவரத்துச் சபை விசேட பஸ் சேவையொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளது. வாக்களிப்பதற்காக கிராமங்களுக்குச்...