follow the truth

follow the truth

March, 14, 2025
Homeஉள்நாடுஇலங்கையில் முதற்தடவையாக பெண் பொலிஸ் அத்தியட்சகர்கள் மூவருக்கு பதவி உயர்வு

இலங்கையில் முதற்தடவையாக பெண் பொலிஸ் அத்தியட்சகர்கள் மூவருக்கு பதவி உயர்வு

Published on

உடன் அமுலுக்கு வரும் வகையில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் பெண்கள் மூவர் பிரதி பொலிஸ்மா அதிபராக பதவி உயர்த்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

அதன்படி, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களாக கடமையாற்றிவந்த ரேனுக ஜயசுந்தர, நிஷாந்தி செனவிரத்ன மற்றும் பத்மினி வீரசூரிய ஆகிய மூவரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.

இலங்கையில், பெண் பொலிஸ் அதிகாரிகள் பிரதி பொலிஸ்மா அதிபர்களாகத் தரமுயர்த்தப்பட்டுள்ள முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது

மூதூர் - தாஹாநகர் பகுதியில் இரண்டு பெண்கள் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், இருவரினதும் பேர்த்தியான 15 வயது சிறுமி...

எம்.பி பதவியை இராஜினாமா செய்தார் சாலி நளீம்

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் முஹம்மட் சாலி நழீம் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தவதாக...

ஜனாதிபதிக்கும் தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று(14) ஜனாதிபதி அலுவலகத்தில்...