follow the truth

follow the truth

September, 23, 2024
Homeஉள்நாடு"இலங்கையின் மீன் உற்பத்திகளை ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்ய உதவுங்கள்"

“இலங்கையின் மீன் உற்பத்திகளை ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்ய உதவுங்கள்”

Published on

இலங்கையின் மீன் உற்பத்திகளை ஜப்பான் மற்றும் ஏனைய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு இடம் வழங்குமாறு கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த டி சில்வா வெளிநாட்டு வர்த்தகர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

பெப்ரவரி 2, 2023 அன்று ஜப்பானின் ஒசாகா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற வர்த்தக மாநாட்டில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.

தனிப்பட்ட அழைப்பின் பேரில் ஆறாவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்ட வர்த்தக மாநாட்டில் கலந்து கொண்ட இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த டி சில்வா, இந்த சந்தர்ப்பத்தை கௌரவமாக கருதுவதாக தெரிவித்தார்.

மேலும், மீன்பிடி உற்பத்திப் பொருட்களின் ஏற்றுமதி சந்தையை விஸ்தரிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும், அதற்கு இந்த மாநாடு நல்லதொரு வாய்ப்பாக அமைந்ததாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

தற்போதைய பொருளாதார நெருக்கடியை கருத்திற்கொண்டு, ஏற்றுமதி சந்தை மற்றும் வெளிநாட்டு முதலீடுகளில் இலங்கையின் விசேட அக்கறை குறித்து மீன்பிடி இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த டி சில்வா மேலும் விளக்கமளித்துள்ளார்.

இங்கு பல வர்த்தகர்கள் இலங்கை மீது கவனம் செலுத்த விருப்பம் தெரிவித்துள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க தெரிவு

இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க 5,740,179 வாக்குகளைப்...

ஊரடங்கு சட்டம் 12 மணிக்கு தளர்த்தப்படும்

நாடளாவிய ரீதியில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டம் இன்று (22) மதியம் 12 மணிக்கு தளர்த்தப்படும் என...

ஊரடங்கு நீட்டிக்கப்படும்

இன்று (22) காலை 6 மணி வரை அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை மேலும் நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு சட்டம் இன்று...