follow the truth

follow the truth

September, 22, 2024
Homeஉள்நாடுகொல்லப்பட்ட வர்த்தகரின் உடல் DNA பரிசோதனைக்கு

கொல்லப்பட்ட வர்த்தகரின் உடல் DNA பரிசோதனைக்கு

Published on

பெலவத்தையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் வீட்டின் நீச்சல் தடாகத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த கோடீஸ்வர ஆடை வர்த்தகரின் பிரேத பரிசோதனை இன்று (06) சட்ட வைத்திய அதிகாரிகளால் மேற்கொள்ளப்படவுள்ளது.

மேலும் அவரது டிஎன்ஏ பரிசோதனையும் அங்கு நடைபெற உள்ளது.

பிரேதப் பரிசோதனை கடந்த வெள்ளிக்கிழமை நடத்தப்படவிருந்த நிலையில், சடலம் நீரில் மூழ்கியதால், உறவினர்களால் அடையாளம் காண முடியாததால், இன்று வரை ஒத்திவைக்கப்பட்டது.

இதேவேளை, இந்தக் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபரான தம்பதியினர் நேற்று (05) பிற்பகல் கந்தானை பகுதியில் வைத்து கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

27 வயதுடைய சந்தேகநபர் ஒருவரும் 23 வயதுடைய சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டதுடன் அவர்கள் நாரஹேன்பிட்டி பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் நாட்டை விட்டு வெளியேறியதாக முன்னர் சந்தேகிக்கப்பட்டது, ஆனால் பின்னர் அவர்கள் வெளிநாடு செல்ல முயற்சி தோல்வியடைந்ததும் விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

சந்தேகநபர்கள் இருவரும் இன்று கடுவெல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு இரு தினங்களுக்கு விளக்கமறியலில் வைக்க உத்தரவு பெறப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஊரடங்கு சட்டம் 12 மணிக்கு தளர்த்தப்படும்

நாடளாவிய ரீதியில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டம் இன்று (22) மதியம் 12 மணிக்கு தளர்த்தப்படும் என...

ஊரடங்கு நீட்டிக்கப்படும்

இன்று (22) காலை 6 மணி வரை அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை மேலும் நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு சட்டம் இன்று...

ஊரடங்கு உத்தரவு அனுமதி குறித்து பொலிசாரின் அறிவிப்பு

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் வீதியை பயன்படுத்துவது தொடர்பில் பொலிஸ் தலைமையகம் மீண்டும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஊரடங்குச் சட்டம்...