follow the truth

follow the truth

March, 14, 2025
Homeஉள்நாடுதேர்தல் பணிகளுக்காக 770 மில்லியன் ரூபா கோரிக்கை

தேர்தல் பணிகளுக்காக 770 மில்லியன் ரூபா கோரிக்கை

Published on

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பணிகளுக்காக 770 மில்லியன் ரூபாவை பெப்ரவரி மாதத்தில் வழங்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு நிதி அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி புஞ்சிஹேவா, நிதி அமைச்சின் செயலாளரிடம் எழுத்து மூலம் இது தொடர்பான கோரிக்கையை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மார்ச் 09 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்குத் தேவையான அடிப்படைச் செலவுகளுக்காக பெப்ரவரி மாதத்தில் 770 மில்லியன் தேவைப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, உரிய தொகையை ஒரேயடியாகவோ அல்லது தவணையாகவோ வழங்க நடவடிக்கை எடுக்குமாறு நிதி அமைச்சின் செயலாளரிடம் தேர்தல்கள் ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.

தேர்தல் செலவினங்களுக்காக தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு நிதியமைச்சு இதற்கு முன்னர் கிட்டத்தட்ட 37 மில்லியன் ரூபாவை வழங்கியுள்ளது.

உள்ளூராட்சி தேர்தல் திகதி வரையிலான காலப்பகுதியில் 04 பில்லியன் ரூபா வரை செலவாகும் என எதிர்பார்க்கப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது

மூதூர் - தாஹாநகர் பகுதியில் இரண்டு பெண்கள் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், இருவரினதும் பேர்த்தியான 15 வயது சிறுமி...

எம்.பி பதவியை இராஜினாமா செய்தார் சாலி நளீம்

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் முஹம்மட் சாலி நழீம் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தவதாக...

ஜனாதிபதிக்கும் தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று(14) ஜனாதிபதி அலுவலகத்தில்...