follow the truth

follow the truth

March, 14, 2025
Homeஉள்நாடுபொலிஸ் திணைக்களத்திற்கு ஜப்பானிய அரசாங்கத்தின் நன்கொடை

பொலிஸ் திணைக்களத்திற்கு ஜப்பானிய அரசாங்கத்தின் நன்கொடை

Published on

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் பாவனைக்காக ஜப்பானிய அரசாங்கத்தினால் அன்பளிப்பு செய்யப்பட்ட 150 மோட்டார் சைக்கிள்கள், 74 வான்கள் மற்றும் மினி பஸ்கள் மற்றும் 115 கண்காணிப்பு உபகரணங்களும் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் அடையாளமாக கையளிக்கப்பட்டன.

வாகனங்களை அவதானித்த ஜனாதிபதி, ஜப்பானிய வெளிவிவகார இராஜாங்க அமைச்சருடன் சிநேகபூர்வ உரையாடலிலும் ஈடுபட்டார்.

இலங்கை பொலிஸாரால் மேற்கொள்ளப்படும் விசாரணைகளை இலகுபடுத்தும் வகையில் ஜப்பான் அரசாங்கம் இந்த நன்கொடையை வழங்கியுள்ளது.

இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிஷுகோஷி ஹிடேகி மற்றும் ஜப்பானிய தூதுக்குழுவினர், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் மற்றும் ஜனாதிபதியின் தலைமை அதிகாரி சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் சர்வதேச அலுவல்கள் பணிப்பாளர் தினுக் கொழும்புகே உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது

மூதூர் - தாஹாநகர் பகுதியில் இரண்டு பெண்கள் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், இருவரினதும் பேர்த்தியான 15 வயது சிறுமி...

எம்.பி பதவியை இராஜினாமா செய்தார் சாலி நளீம்

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் முஹம்மட் சாலி நழீம் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தவதாக...

ஜனாதிபதிக்கும் தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று(14) ஜனாதிபதி அலுவலகத்தில்...