follow the truth

follow the truth

September, 21, 2024
Homeபொலிட்டிக்கல் மேனியாPUCSL தலைவர் மீது 14 கடுமையான குற்றச்சாட்டுகள்

PUCSL தலைவர் மீது 14 கடுமையான குற்றச்சாட்டுகள்

Published on

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்கவுக்கு எதிராக பதினான்கு அம்ச குற்றப்பத்திரிகையை சமர்ப்பிக்க மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு தயாராகி வருகிறது.

இந்த குற்றப்பத்திரிகை கடந்த நேற்று(03) சட்ட வரைவு திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

சட்ட வரைவு திணைக்களம் சட்டத்தின் பிரகாரம் குற்றப்பத்திரிகையை தயாரித்த பின்னர், மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர அதனை அடுத்த வாரம் எட்டாம் திகதிக்கு பின்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளார்.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவருக்குச் சொந்தமானது என நம்பப்படும் அமைப்பினால் மொத்தமாக மின்சாரத்தை கொள்வனவு செய்து நுகர்வோருக்கு விற்பனை செய்வதற்கான அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக் கொண்டமை உட்பட 14 குற்றச்சாட்டுக்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

தலைவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்கப்படும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர அண்மையில் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். குற்றப்பத்திரிகை கிடைக்கப்பெறும் வரை காத்திருப்பதாகவும், தனது செயற்பாடுகளை ஜனாதிபதி பாராளுமன்றத்தில் விமர்சித்ததாகவும் தலைவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களாக கடமையாற்றிய மொஹான் சமரநாயக்க மற்றும் உதேனி விக்ரமசிங்க ஆகியோரும் கடந்த வெள்ளிக்கிழமை (03) அந்தப் பதவிகளில் இருந்து விலகினர். அவர் தனது இராஜினாமா கடிதங்களை நிதியமைச்சருக்கு அனுப்பியுள்ளார்.

பொதுப் பயன்பாட்டு ஆணையம் என்பது ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பாகும்.

இதேவேளை, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவருக்குச் சொந்தமானதாகக் கருதப்படும் ஹோட்டல் வளாகத்தின் மின்சாரக் கட்டணம் செலுத்தப்படாமை மற்றுமொரு குற்றச்சாட்டாகும்.

அதன்படி, செலுத்த வேண்டிய மொத்த மின்கட்டணம் ரூ.14,76,651.

இத்தொகையை செலுத்தாமல் தொகையை குறைக்குமாறு இலங்கை மின்சார சபையுடன் தலைவர் கலந்துரையாடல் ஒன்றையும் மேற்கொண்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மொட்டுக் கட்சி உறுப்பினர்கள் மூவர் கட்சியிலிருந்து நீக்கம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்துவதற்கு அந்த கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, அனுராதபுரம்...

துமிந்த சில்வாவின் விடுதலை பேச்சுவார்த்தை தோல்வி – பசில் நாட்டை விட்டு வெளியேறினார்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். இலங்கையின் பிரபல...

நோயிலிருந்து மீண்டு வரும் நிலையில் மருத்துவர்களை மாற்றப் போகிறீர்களா?

இந்த நாட்டு மக்களிடம் எந்த பொய்யை வேண்டுமானாலும் கூறி அவர்களின் மனதைவெல்ல முடியும் என ஜே.வி.பி நினைக்கிறதாக அமைச்சர்...