follow the truth

follow the truth

September, 20, 2024
HomeTOP1அரச அனுசரனையுடன் ஊடகத்துறை உயர்கல்வி கற்கைநெறி - அமைச்சரவை அனுமதி

அரச அனுசரனையுடன் ஊடகத்துறை உயர்கல்வி கற்கைநெறி – அமைச்சரவை அனுமதி

Published on

வெகுசன ஊடகத்துறையில் காணப்படும் பிரச்சினைகளை இனங்கண்டு உள்ளூர் மற்றும் சர்வதேச ரீதியான கற்கைகளின் தரநியமங்களுக்கமைய வெகுசன ஊடகக் கல்வி மேம்பாடு மற்றும் உயர் தரநியமங்களைப் பாதுகாப்பதற்காகவும், அரச அனுசரணையுடன் கூடிய நிறுவனமொன்றை தாபிக்க வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது.

குறிப்பாக, பாடசாலைகளில் வெகுசன ஊடகவியல் தொடர்பான பாடவிதானத்தைப் பயில்கின்ற குறிப்பிடத்தக்களவிலான மாணவர்கள் இருக்கின்ற போதிலும், அவர்களுக்கான உயர்ந்த தரநியமங்களுடன் கூடிய போதுமானளவு கற்கை நிறுவனங்கள் இதுவரை தாபிக்கப்படவில்லை.

பல்கலைக்கழகங்களில் மேற்கொள்ளப்படும் வெகுசன தொடர்பாடல் பட்டப்படிப்புக் கற்கைகள் சில காணப்பட்டாலும், குறித்த கற்கைகள் மூலம் தொழில்வாண்மை ரீதியான ஊடகவியலாளர்களை உருவாக்குவதற்குப் போதியவாறான பிரயோக ரீதியானதும் தொழிநுட்ப ரீதியானதுமான அறிவு வழங்கப்படுவதில்லை என்பது அவதானிக்கப்பட்டுள்ளது.

அதனால், தற்போது வெகுசன ஊடகத்துறையில் பணிபுரியும் ஊடகவியலாளர்களுக்கும், ஊடக முகாமையாளர்களுக்கும் அதேபோல் ஊடகத்துறையில் பிரவேசிப்பதற்கு எதிர்பார்க்கும் பாடசாலை மாணவர்களுக்கும் வெகுசனத் தொடர்பாடல் பாடவிதானத்தை கற்பதற்கும், தேவையான பிரயோக ரீதியான பயிற்சிகளைப் பெற்றுக் கொள்வதற்கும் அவர்களுடைய இயலளவு விருத்தியை ஏற்படுத்தி தொழில்வாண்மையை மேம்படுத்துவதற்கான வாய்ப்புக்களை வழங்குவதற்கும், விழுமியம்மிக்க சுயகட்டுப்பாட்டுடன் கூடிய ஊடகக் கலாச்சாரத்தை ஏற்படுத்துவதற்குத் தேவையான ஊடகவியலாளர்களை உருவாக்குவதைக் குறிக்கோளாகக் கொண்டு, வெகுசன ஊடகவியல் தொடர்பான சான்றிதழ் பாடநெறி தொடக்கம் பட்டப்படிப்பு மற்றும் பட்டப்பின் படிப்பு வரைக்குமான கற்கை வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு இயலுமான வகையில் வெகுசன உயர்கல்விக் கற்கைகள் மற்றும் பயிற்சி நிறுவனமாக ‘இலங்கை வெகுசன ஊடகவியல் பட்டயக்கற்கைகள் நிறுவனம்’ எனும் பெயரிலான நிறுவனமொன்றை தாபிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக வெகுசன ஊடக அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டுகள் விநியோகிக்கும் பணிகள் நாளை ஆரம்பம்

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டு உள்ளிட்ட தேர்தலுக்கான சகல ஆவணங்களையும் விநியோகிக்கும் பணிகள் நாளை காலை முதல் ஆரம்பிக்கப்படும்...

உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு கோரிக்கை

ஜனாதிபதி தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகும் வரை உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆனந்த...

ஜனாதிபதித் தேர்தல் – பாதுகாப்பிற்காக முப்படைகளும் இணக்கம்

ஜனாதிபதித் தேர்தலின் போது அமுல்படுத்தப்பட வேண்டிய இறுதி பாதுகாப்பு வேலைத்திட்டம் பொலிஸ்மா அதிபர்களுக்கு இன்று (19) வழங்கப்பட்டதாக பொது...