follow the truth

follow the truth

March, 14, 2025
Homeஉள்நாடுநாப்தா இன்றி களனிதிஸ்ஸ செயற்பாடுகள் நிறுத்தம்

நாப்தா இன்றி களனிதிஸ்ஸ செயற்பாடுகள் நிறுத்தம்

Published on

களனிதிஸ்ஸ கூட்டு சுழற்சி மின் நிலையத்தில் நேற்று (02) இரவு மின் உற்பத்திப் பணிகள் நிறுத்தப்பட்டதாக மின் உற்பத்தி நிலையத்தின் உயர் அதிகாரி ஒருவர் டெய்லி சிலோன் செய்திப் பிரிவுக்கு தெரிவித்தார்.

165 மெகாவாட் மின்சாரத்தில் இயங்கி வரும் இந்த ஆலை, தேசிய மின் கட்டமைப்பிற்கு பாரிய பங்களிப்பை வழங்கி வரும் நிலையில், மின் உற்பத்திக்கு தேவையான நாப்தா கையிருப்பு இல்லாததால் நிறுத்தப்பட்டதாகவும் அந்த அதிகாரி குறிப்பிட்டார்.

எண்ணெய் நிறுவனத்திடம் 2000 மில்லியன் லீட்டர் இருந்தபோது நாப்தா வழங்கப்படாததால் இந்த ஆலை செயலிழந்தது என்றும் அந்த அதிகாரி கூறினார்.

மேலும், டீசல் ஆலைகளை விட நாப்தா ஆலைகள் ஒரு யுனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய குறைந்த செலவில் உள்ளது என்றார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இரவு நேர பணிகளில் இருந்து விலகும் கிராம உத்தியோகத்தர்கள்

பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள் காரணமாக இன்று (14) முதல் அனைத்து பெண் கிராம உத்தியோகத்தர்களும் இரவு நேர சேவைகளிலிருந்து...

வெல்லவாய மற்றும் எல்ல நோக்கி செல்லும் வாகனங்களுக்கான விசேட அறிவித்தல்

சீரற்ற வானிலை காரணமாக, எல்ல - வெல்லவாய வீதியின் 12வது கிலோமீட்டர் கம்பத்திற்கு அருகிலுள்ள பகுதியில் வீதி தடைப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம் (நேரலை)

சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன. இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள், மு.ப. 09.30 - மு.ப. 10.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்...