follow the truth

follow the truth

March, 13, 2025
Homeஉள்நாடுஅதிவேக நெடுஞ்சாலை பேருந்துகளுக்கான முற்கொடுப்பனவு அட்டைகள்

அதிவேக நெடுஞ்சாலை பேருந்துகளுக்கான முற்கொடுப்பனவு அட்டைகள்

Published on

காலிக்கும் மகும்புரவிற்கும் இடையில் இயங்கும் நெடுஞ்சாலை பஸ்களில் பயணிப்பதற்கு இன்று (02) முதல் முற்கொடுப்பனவு அட்டைகள் வழங்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலான் மிராண்டா தெரிவித்தார்.

கொட்டாவ, மகும்புர பல்வகை போக்குவரத்து நிலையத்திலிருந்து இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும், பின்னர் இதனை நாடளாவிய ரீதியில் பயன்படுத்தும் வகையில் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த அட்டைகளை மக்கள் வங்கி மற்றும் தேசிய சேமிப்பு வங்கி ஆகியவற்றில் கொள்வனவு செய்ய முடியும் எனவும் நேற்று (பெப்.1) அரச வங்கிகளுடன் இந்த அட்டைகளை வழங்குவது தொடர்பில் உடன்பாடுகள் எட்டப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த முற்கொடுப்பனவு அட்டையை பொது மக்கள் அரச வங்கிகள் ஊடாக பெற்றுக்கொள்ள தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

முதற்கட்டமாக நெடுஞ்சாலைகளில் இயங்கும் பேருந்துகளுக்கு இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டு அதன் பின்னர் ரயில் சேவையிலும் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

விசேட தேவையுடைய பயணிகளின் வசதிக்காக மாகும்புரையில் உதவி மையம்

கேட்கும் திறன் குறைபாடு பார்வை குறைபாடு போன்ற விசேட தேவையுடைய பயணிகளின் வசதிக்காகவும் பொதுப் போக்குவரத்தை அணுகுவதற்கான வாய்ப்பை...

இயலாமையுடைய நபர்கள் ஒன்றியத்தின் தலைவராக சுகத் வசந்த த சில்வா தெரிவு

பத்தாவது பாாராளுமன்றத்திற்கான இயலாமையுடைய நபர்கள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த த சில்வா...

நியாயமான சந்தையில் அபிவிருத்தி எதிர்பார்ப்புகளை வெற்றிகொள்ள இலங்கைக்கு JICA மற்றும் JFTC ஆதரவு

நுகர்வோர் மற்றும் உற்பத்தியாளரையும் பாதுகாத்து இலங்கையில் தரமான பொருட்கள் மற்றும் சேவைகளின் விநியோகத்தை உறுதி செய்வதற்குத் தேவையான கொள்கை...