follow the truth

follow the truth

October, 18, 2024
Homeஉள்நாடுகெஹெலியவின் பயணத் தடை தற்காலிகமாக நீக்கம்

கெஹெலியவின் பயணத் தடை தற்காலிகமாக நீக்கம்

Published on

சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவிற்கு வெளிநாடு செல்ல கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி இன்று அனுமதி வழங்கியுள்ளார்.

நாட்டிற்கு தேவையான மருந்துகளை கொள்வனவு செய்வதற்காக, தமது சேவை பெறுநர் வெளிநாடு செல்வதாக அமைச்சர் சார்பில் மன்றில் ஆஜரான சட்டத்தரணி தெரிவித்தார்.

அமைச்சரின் கோரிக்கைக்கு அனுமதி வழங்கப்படாத பட்சத்தில், நாட்டிற்குத் தேவையான மருந்துகளை கொள்வனவு செய்வதில் சிக்கல்கள் ஏற்படும் எனவும் சட்டத்தரணி நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.

குறித்த விடயங்களை ஆராய்ந்த நீதிபதி, பிரதிவாதிக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத்தடையை தற்காலிகமாக நீக்கி எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் மே மாதம் 20 ஆம் திகதி வரையில் வௌிநாட்டு பயணம் மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பொதுத் தேர்தல் – 290 முறைப்பாடுகள் பதிவு

பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய 290 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது, தேர்தல் சட்ட விதிகளை மீறியமை தொடர்பிலேயே...

இன்று இடம்பெற்ற ரயில் விபத்து தொடர்பில் ஆராய குழு

கொழும்பு - மட்டக்களப்பு பிரதான ரயில் மார்க்கத்தில் இன்று இடம்பெற்ற ரயில் விபத்து தொடர்பில் ஆராய்வதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகத்...

வாகன வருமான அனுமதிப் பத்திரம் குறித்து அறிவித்தல்

வாகன வருமான அனுமதிப்பத்திரங்களை பெற்றுக்கொள்வதில் மேல் மாகாணத்தை ஏனைய மாகாணங்களுடன் இணைக்குமாறு அமைச்சர் விஜித ஹேரத் உரிய அதிகாரிகளுக்கு...